Skip to main content

ஆர்யாவிற்காக முடிவை மாற்றிக்கொண்ட சந்தானம் 

Published on 26/08/2022 | Edited on 26/08/2022

 

Santhanam

 


சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சந்தானம் பேசுகையில், ”நான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் அந்த வாய்ப்புகள் எதையும் ஏற்காமல் தனி ட்ராக்கில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், ஆர்யா பாஸ் (எ) பாஸ்கரன் 2 அல்லது வேறு படம் எடுத்தால் நிச்சயம் நான் நடிப்பேன். அந்த அளவிற்கு ஆர்யா எனக்கு உண்மையான நண்பன். நான் காமெடியனாக இருந்தபோதே சைக்கிளிங் பண்ணு, ஸ்விம்மிங் பண்ணு, காமெடியனாக இருந்தாலும் ஹீரோ மாதிரி இருக்கணும் என்று சொல்லி நிறைய அட்வைஸ் பண்ணுவார். பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலும் எனக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்தார்.  

 

ஆர்யாவின் எந்தப் படமாக இருந்தாலும் அதற்கு என்னுடைய ஆதரவு இருக்கும். ஏலியன் என்ற புது கான்செப்டில் கேப்டன் படத்தை எடுத்திருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இது மாதிரியான படங்கள் ஆர்யா தொடர்ந்து பண்ண வேண்டும். அதற்கு இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். மக்கள் ஆதரவு கொடுங்கள்” எனத் தெரிவித்தார். 

 

ராஜேஸ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான வேலைகள் நடந்துவரும் நிலையில், தற்போது ஹீரோவாகிவிட்ட சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிப்பாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. அந்த சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது அவரது இந்த மேடைப்பேச்சு.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழாவில் ஆர்யா

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
arya attend studio opening ceremony

ஓ.எம்.ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

மேலும் ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும் சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ்,  'சீயான்' விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மீண்டும் இணைந்த ஆர்யா - சந்தானம் கூட்டணி

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
arya santhanam new movie update

டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குபட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 2ஆம் தேதி  வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ஆர்யாவும் கலந்து கொண்டார். 

அப்போது ஆர்யா பேசுகையில், “பாஸ் என்கிற பாஸ்கரன் படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும். 65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்” என்றார்.