Skip to main content

"கடினமான உழைப்பு; ஆனால் வெறுப்பை கக்குகிறார்கள்" - கே.ஜி.எஃப் நடிகர் வேதனை

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

sanjay dutt talk about shamshera movie troll

 

கரண் மல்கோத்ரா இயக்கத்தில், ரன்பீர் கபூர், வாணி கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ஷம்ஷேரா' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரன்பீர் கபூரின் படம் திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு போதிய வரவேற்பைப் படம் பெறவில்லை, மாறாகக் கலவையான விமர்சனங்களையே பெற்றது 

 

ad

 

இதனைத்தொடர்ந்து இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். இதைப்பார்த்து கடுப்பான படத்தின் இயக்குநர்  இயக்குநர் கரண் மல்கோத்ரா ஷம்ஷேரா படத்திடம் பேசுவதுபோல ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஷம்ஷேரா, " நீ எப்போதும் இருப்பது போல கம்பீரமானவன். இந்தத் தளத்தில் உன் மீது அன்பு, வெறுப்பு, இழிவு காட்டப்படுகிறது. இந்த வெறுப்பைக் கையாள முடியாமல் நான் அமைதி காத்ததற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அந்தப் பலகீனத்திற்கு மன்னிப்பே கிடையாது. இப்போது நான் உன்னுடன் இருக்கிறேன். நீ நான் இயக்கிய படம் என்பதில் பெருமை கொள்கிறேன். இனி எல்லாவற்றையும் சேர்ந்தே எதிர்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இவரை தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத், கடினமான உழைப்பை கொட்டி இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்துள்ளோம். ஆனால் நிறைய பேர் குறை கூறுகிறார்கள். அதிலும் பலர் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பை வெளிப்படுத்துவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சஞ்சய் தத் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த கே.ஜி.எஃப் படத்தில் அதீரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலியின் கழுத்தை வெட்டி கையில் பிடித்தபடி வீடியோ; பதைபதைக்க வைக்கும் சைக்கோ கொலை

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Video of girlfriend's throat being cut and held in hand; A young man's disturbing psycho act

உத்தரப்பிரதேசத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்து வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியின் தலையை வெட்டி சிரித்த முகத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட சைக்கோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் புலசந்தர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தன். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இந்நிலையில் இளைஞர் அந்தன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதலி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தன் திடீரென ஆத்திரத்தில் காதலியின் தலையைத் துண்டாக வெட்டியுள்ளார்.

வெட்டிய தலையுடன் சிரித்துக் கொண்டே வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நடிகர் சஞ்சய் தத் நடித்த கல்நாயக் என்ற படத்தைப் பார்த்து அதில் வரும் 'பல்லு' என்கிற கேரக்டர் போலவே தானும் கொலை செய்தேன்' எனத் தெரிவித்துள்ளது பதைபதைப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் 'இனி யார் என்னை ஏமாற்றினாலும் இப்படித்தான் கொலை செய்வேன்' எனவும் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது,

ஒரு சினிமா நடிகரைப் பார்த்து இளைஞர் கொடூரச் செயலில் ஈடுபட்டு நேரடியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உத்தரப்பிரதேச போலீசார் இளைஞர் அந்தனை கைது செய்துள்ளனர்.

Next Story

“அடிக்காதீங்க, அடிக்காதீங்க” - கத்திய கமல் பட நடிகை 

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
raveena tandon car accident issue

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரவீனா டாண்டன். தமிழில் பி.வாசு இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான சாது படத்தில் அறிமுகமாகியிருந்தார். பின்பு கமலுடன் ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார். 

raveena tandon car accident issue

மும்பை ககர் பகுதியில் வசித்து வரும் இவர், மது போதையில் சிலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஜூன் 1ஆம் தேதி இரவு, அவரது வீட்டில் ரவீனா டாண்டனின் டிரைவர், காரை பார்க்கிங் செய்யும் போது, ரிவர்ஸ் எடுக்கையில் அப்பகுதியில் சாலையோரம் வந்த குடும்பத்தினர் மீது மோதியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உடனே அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் அந்த டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு அந்த இடத்திற்கு வந்த ரவீனா டாண்டன், அந்த குடும்பத்தினருடன் வாதிட்டுள்ளார். பின்பு அவரை அந்த குடும்பத்தினர் சூழ்ந்து கொள்ள, வாக்குவாதம் முற்றி அந்த குடும்பத்தினர் டிரைவரை அடிக்க முயல்கின்றனர். தடுத்த ரவீனா டாண்டன், “அடிக்காதீங்க, அடிக்காதீங்க” என கத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது மூக்கில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிவதாக ஒரு பெண்மணி சொல்கிறார். மேலும் சம்பவத்தின் போது ரவீனா டாண்டன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் ரவீனா டாண்டன் மீது புகார் கொடுத்துள்ளனர். இது குறித்த விசாரித்த காவல் துறையினர், ரவீனா டாண்டன் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, ரவீனா டாண்டன் கார் யார் மீதும் மோதவில்லை, யாரும் காயமடையவில்லை, அதோடு அவர் மது போதையிலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கார் யார் மீதும் மோதவில்லை என்பது பதிவாகியுள்ளது.