Skip to main content

ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த சஞ்சய் தத்!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

sanjay dutt

 

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆக்ஸ்ட் 8ஆம் தேதி கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி அவரது உடல்நலம் சீராகி வீடு திரும்பினார். சஞ்சய் தத் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவர் தன்னுடைய உடல்நலம் மற்றும் திரைப்பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

அதில், "வணக்கம் நண்பர்களே... சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கவலைப்படவோ அல்லது தேவையின்றி யூகிக்கவோ வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகளைக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துகளுடன், நான் விரைவில் மீண்டும் வருவேன்" எனக் கூறியுள்ளார்.

 

இதன்பின் சஞ்சய் தத் சிகிச்சை பெற்று வரும்போது உடல்நிலை மெலிந்து காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவியது. மிகவும் மோசமாக இருப்பதுபோல இருந்த சஞ்சய் தத், திடீரென 'கே.ஜி.எஃப்' படத்திற்காக ஸ்டைல் செய்துகொள்ள பிரபல ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹகீம் சலூனுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியளித்தார். அப்போது பேசியவர் விரைவில் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில வாரங்களாக எனக்கும், என் குடும்பத்தினருக்கும் கடினமான நேரமாக அமைந்தது. பலசாலியான வீரனுக்குதான் கடுமையான சவால்களை அளிப்பார்கள் என்று சிலர் சொல்வார்கள். என்னுடைய மகனின் பிறந்தநாளான இன்று, கடுமையான சவாலில் வென்று என்னுடைய நலமுடன் மீண்டிருப்பதை அவருக்கு பரிசாக வழங்குகிறேன்.

 

உங்கள் அனைவருடைய நம்பிக்கையும் ஆதரவும் பெறவில்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது. எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் அனைவருடைய அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் என்னுடைய நன்றிகள். குறிப்பாக எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவக்குழு, மருத்துவர்களுக்கும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய்யைத் தொடர்ந்து அஜித் - மோதத் தயாராகும் சஞ்சய் தத்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

sanjay dutt to play villan in ajith vidaamuyarchi

 

அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது. பின்பு தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகப் பேசப்பட்டது.

 

இப்படத்தின் படப்பிடிப்பு பல முறை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் சில காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் பேச்சுக்கள் எழ, "இப்படம் கைவிடப்படவில்லை, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். மேலும் எங்கள் பெருமைமிகு படமாக இது இருக்கும்" என சந்திரமுகி-2 பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தெரிவித்தார். 

 

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்ட நிலையில் அவர் சிறிய வில்லனாம். மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவுள்ளாராம். இவர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சஞ்சய் தத் அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

 

 

Next Story

'ஆண்டனி தாஸ்' - லியோ படக்குழு வெளியிட்ட புது வீடியோ

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

leo sanjay dutt character glimpse

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

சமீபத்தில் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவுபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்திய படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் படமாக்கி முடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.