Skip to main content

சமுத்திரக்கனி படத்துக்கு அமைச்சர் எச்சரிக்கை - தயாரிப்பாளர் விளக்கம்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

samuthirakani pawan kalyan bro movie issue

 

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, அவரது படமான 'வினோதய சித்தம்' படத்தை தெலுங்கில் தற்போது ரீமேக் செய்துள்ளார். இதில் நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும், சாய் தரம் தேஜூம் நடித்துள்ளார்கள். ‘ப்ரோ’ என்ற தலைப்பில் கடந்த 28 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கவனித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூலிலும் ரூ.100 கோடியை நெருங்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

இப்படத்தில் தன்னை கொச்சைப்படுத்தியதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அமைச்சர் அம்பதி ராம்பாபு தெரிவித்திருந்தார். அவர் பேசுகையில், "படத்தில் ஷியாம்பாபு என்ற கதாபாத்திரம் வருகிறது. அந்த கதாபாத்திரம் பவன் கல்யாண் கதாபாத்திரத்தால் அவமானப்படுத்தவும், சிறுமைப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இது போன்று தொடர்ந்து செய்தால் தக்க பாடம் புகட்டப்படும். அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என எச்சரிக்கை விடுத்திருந்தார். 

 

மேலும், "பவன் கல்யாண் ஒரு என்.ஆர்.ஐ. அமெரிக்காவிலிருந்து அவருக்குப் பணம் வருகிறது. இது ஒரு பெரிய மோசடி, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். சந்திரபாபு ஆட்கள், படத்தின் தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் மூலம் பவன் கல்யாணுக்கு உதவி செய்கிறார்கள். என்னிடம் இருக்கும் புள்ளி விவரங்களின் படி படம் படுதோல்வி அடைந்து வருகிறது" என்றார். அதோடு இப்படம் ஹவாலா பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் மத்தியப் புலனாய்வு அமைப்புகளிடம் புகார் அளிக்க நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் வி. விஜய் சாய் ரெட்டி மற்றும் எம்.பி.க்களை சந்திக்கிறார். 

 

இந்நிலையில் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு படத்தின் தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில், "இந்த பண மோசடி குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஷியாம்பாபு கதாபாத்திரத்துக்கும் ராம்பாபுவுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை" எனத் தெரிவித்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான்” - சமுத்திரக்கனி 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
samuthirakani speech in Ramam Ragavam Teaser Launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த  விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சமுத்திரக்கனி பேசுகையில், “அப்பா கதை என்றாலே கேட்டுவிடுவது. அப்படித்தான் இந்த கதையையும் கேட்டேன். அப்பா மகன் உறவை புரிந்து கொள்ளவே முடியாது. நிறைய அப்பாக்கள் என்னிடம், மகனை பற்றி பேசியிருக்கிறார்கள். பத்து நாள் முன்னாடி கூட சிவகாசியில், ஒரு அப்பா, அவரின் மகனிடம் பேசச் சொன்னார். ஃபோனில் கேம் ஆடிக்கொண்டே இருக்கிறான், தப்பான வழியில் போய்விடுவானோ என பயமாக இருப்பதாக சொன்னார். பையனிடம் பேசினேன். அவனுக்கு ரொபோட்டிக் ரொம்ப பிடிக்கும் என்றும் அதை அவனே தயாரிக்கப் போவதாகவும் சொன்னான். 

அதோடு அதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றான். உடனே அவனின் அப்பாவிடம் பத்து நிமிஷம் பேசினேன். இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான். மகன் என்னமோ செய்ய வேண்டும் என நினைக்கிறான். அதை செய்யவிடுங்கள். உங்களுடைய அறிவை அவன் மூளையில் திணிக்காதீர்கள். எல்லோரும் அவரவர் இடத்தில் மிகச் சரியாக இருக்கிறார்கள்” என்றார்.  

Next Story

“மேக்கிங் தேவையில்லை; எமோஷனே போதும்” - வெற்றி குறித்து சூரி    

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
soori speech at samuthirakani Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது என்னுடைய கேரக்டரில் நடித்து, இங்கு என்னைவிட அங்கு அதிக வரவேற்பை பெற்றவர் தனராஜ். அப்போது முதல் என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்கு ஃபோனில் பண்ணி பேசுவார். நிமிர்ந்து நில் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது கூட நிறைய பேசுவோம். நான் பேசுவது அவருக்கு புரியாது, அவர் பேசுவது எனக்கு புரியாது. விடுதலை பார்த்துவிட்டு அரை மணிநேரம் பேசினார். டைரக்டர் எல்லாம் நடிகராக மாறிவரும் காலத்தில் ஒரு காமெடி ஆக்டர் டைரக்டராகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.  

காமெடி நடிகரா ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், ஹீரோவை விட அதிக படங்களில் நடித்திருப்போம். அதனால் நிறைய டைரக்டர்களுடன் வேலை பார்த்திருப்போம். அவர்களிடமிருந்து எதாவது ஒன்று தனராஜ் கத்துக்கிட்டு இருப்பார். அதை எல்லாமே இந்த படத்தில் பதிவு செய்திருப்பார் என நம்புறேன். பொதுவாக அப்பா மகன் கதையென்றால், மேக்கிங் பெரிதாக தேவையில்லை. இருவருக்கும் இடையிலான எமோஷன்களை சரியாக பதிவு செய்தால் போதும். அப்படி பதிவு செய்த படங்கள் தோற்றதில்லை. உதாரணத்திற்கு அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த படத்திலும் அப்பா மகன் எமோஷனை நன்றாக காட்டியிருப்பது போல் தெரிகிறது. அதனால் இந்த படமும் தோற்காது. சமுத்திரக்கனியை உண்மையான ஹீரோ என அவரிடம் பழகும் நிறைய பேர் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கும் அவர் ஹீரோ மாதிரி தான். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார்” என்றார்.