Skip to main content

நடிகை சமீரா ரெட்டிக்கு கரோனா!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

sameera reddy

 

நடிகை சமீரா ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்டை, வெடி உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சினிமாவில் இருந்து முழுமையாக விலகி இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்திவருகிறார். தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை சமீரா ரெட்டி தன்னுடைய சமூக வலைதளப்பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். சாஸி மற்றும் சாசு கடவுளின் ஆசீர்வாதத்தால் தனியாக பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாங்கள் வீட்டுத் தனிமையில் இருக்கவுள்ளோம். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருப்பதை நான் அறிவேன். இது, நேர்மறையான உறுதிமொழிகளுடன் திடமாக இருக்க வேண்டிய நேரம். நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா தொற்றில் இருந்து மீண்ட தமிழ் நடிகை!

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

Sameera Reddy

 

நாடு முழுவதும் வேகமெடுத்துள்ள கரோனா இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்டவை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள பிரபல நடிகை சமீரா ரெட்டிக்கு கடந்த மாதம் 18ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு உரிய சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், தான் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், ஆரோக்கியமான உணவுகள், நல்ல தூக்கம், சிறிய உடற்பயிற்சிகள் மூலம் நெருக்கடியான இந்த நேரத்தில் அனைவரும் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.