Skip to main content

பரியேறும் பெருமாள், அசுரன் மாதிரியான படங்களின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

 Rj Balaji

 

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

 

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில்,"இந்தப் படத்தின்போது அருண்ராஜா காமராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு ஏற்பட்டது. அதையெல்லாம் தாண்டி இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தை எடுத்துள்ளார். ஜெய் பீம், பரியேறும் பெருமாள், அசுரன், பா.ரஞ்சித்தின் படங்கள் வெளியாகும்போது இல்லாத ஜாதியை பற்றி இப்போது ஏன் பேசுகிறார்கள் என்று சிலர் பரவலாக பேசுவதை பார்க்க முடிகிறது. அது உண்மையில்லை. சமீபத்தில் உ.பி.யில் ஒரு 13 வயது தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுபற்றி அந்தப் பெண் போலீசில் புகார் கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

 

இது உ.பி.யில்தானே நடந்திருக்கு என்றில்லை. நம் தமிழகத்தில் இன்னும் 445 கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக தகவலறியும் சட்டம் மூலமாகத் தெரியவந்திருக்கிறது. இப்படியான சூழலில் நெஞ்சுக்கு நீதி மாதிரியான படங்கள் வரவேண்டும். 25 வயதுக்கு மேலுள்ள அனைவரது மனதிலும் சாதி ஆழமாக பதிந்துள்ளது என்றால் இனி வரும் குழந்தைகளின் மனதில் இது இல்லை என்ற புரிதலை ஏற்படுத்த இது மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும்" எனத் தெரிவித்தார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நம்பிக்கைத் தரும் படம்” - ஆர்.ஜே பாலாஜி

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
rj balaji speech in singapore saloon success meet

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் ஆர்.ஜே பாலாஜி, ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.    

அப்போது ஆர்ஜே பாலாஜி பேசுகையில், “இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாதியில் அரவிந்த் சுவாமி சார் கதாபாத்திரம் பார்த்துவிட்டு இவரைப் போல ஒருவர் நம் வாழ்வில் வந்துவிட மாட்டார்களா என நிறையப் பேர் சொன்னார்கள். அப்படி சிறப்பான நடிப்பைக் கொடுத்த அவருக்கு நன்றி. படம் வெளியாகி முதல் வாரத்தில் பார்வையாளர்களுக்குப் பிடித்து, இரண்டாவது வாரத்தில் படத்திற்கு புஷ் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சக்சஸ் மீட் நடத்துவதற்கான காரணம். அப்படி, எங்கள் படமும் பார்வையாளர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. 

சவுத் இந்தியன் அமீர்கான் என என்னை சின்னி ஜெயந்த் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்துவிட்டது. அவர் பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. அந்தப் பட்டம் எனக்கு வேண்டாம். படத்திற்கு ஆரம்பத்திலும் முடிவிலும் நல்லதாக எழுதுங்கள் என இமான் அண்ணாச்சி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மீடியாவுக்கு அவர்கள் கருத்தை சொல்ல எல்லா சுதந்திரமும் உண்டு. அதேபோல, மக்களுக்காக நாங்கள் எடுத்த படம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஐசரி கணேஷ் சார் எனக்கு அப்பா போன்ற நெருங்கிய உறவும் அன்பும் கொண்டவர். ’எல்.கே.ஜி2’, ‘மூக்குத்தி அம்மன்2’ போன்ற ஐடியாவும் உண்டு. அதையும் ஐசரி சாரிடம்தான் செய்வேன். இரத்தம், கத்தி போன்ற படங்களுக்கு மத்தியில் நிறைய பேருக்கு சிறு நம்பிக்கைத் தரும் விதமாக ‘சிங்கப்பூர் சலூன்’ வந்துள்ளது. அது இரண்டாம் வாரத்திலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

Next Story

“டேட்ஸ் கூடுதலாக கேட்பேன், சம்பளம் பேரம் பேசுவேன்” - ஆர்.ஜே. பாலாஜி

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
rj balaji about singapore saloon  movie and his vinema experience

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி,  மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், அதில் 200 சதவீதம் உழைப்பை போடுவேன். ஒரு ரூபாய் கூட ஒரு இடத்தில் வீணாக போவதை விரும்பமாட்டேன். நடிகர்களுக்கு ஃபோன் பண்ணி டேட்ஸ் கூடுதலாக கேப்பேன். சம்பளம் பேரம் பேசுவேன். இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்து என் படத்தில் பண்ணுவேன். ஏனென்றால், அது நம்ம படம் என்பதினால். இதே வேலையைத் தான் ரூ.3 கோடி பட்ஜேட்டில் எடுத்திருந்தாலும் செய்திருப்பேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஐசரி கணேஷ் சாரை நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும். ஆனால் முதல் முறையாக அவரது மனைவியை சந்தித்தபோது, ‘இவரை வச்சு படமெடுத்தா, காசை ஏமாத்திட்டு போயிடுறாங்க... ஹூம், இவனும் வந்திட்டான் படமெடுக்கிறதுக்கு...’ அப்படின்ற ரேஞ்சில தான் பார்த்தாங்க. அப்புறம் அவுங்க கிட்ட போய் என்னால அவருக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகாது என ப்ராமிஸ் பண்ணேன். ரொம்ப அர்த்தமோடு தான் அதை சொன்னேன். அதே போல் எல்.கே.ஜியும், மூக்குத்தி அம்மன் படமும் காப்பாற்றிவிட்டது” என்றார்.