Skip to main content

பவர் ஸ்டாருக்கு முன்னோடி, அழகிரிக்குத் தம்பி, சுதாகரனுக்கு.... - ஜே.கே.ரித்திஷ் கதை

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

2008ஆம் ஆண்டு... நாயகன் என்ற பெயரில் ஒரு படத்தின் போஸ்டர் தமிழக மக்களை நின்று கவனிக்க வைத்தது. இரண்டு காரணங்கள்... ஒன்று 'நாயகன்', கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தமிழின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆல் டைம் பெஸ்ட் மூவி. அந்தப் பெயரில் வந்திருக்கும் திரைப்படம். இன்னொரு காரணம், 'யார்ரா இது...' என்று கேட்கும் அளவுக்கு உடையிலும் நடையிலும் கவனிக்கவைத்த அந்த ஹீரோ. அதற்கு முன்பே ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் 'நாயகன்' படம்தான் ஜே.கே.ரித்தீஷை அனைவரும் கவனிக்க வைத்தது. ஓப்பனிங் சாங், ஹீரோ பில்ட்-அப் என அத்தனை அட்டகாசங்களையும் அந்தப் படத்தில் செய்திருந்தார் ரித்திஷ். அந்தப் படம் வெளிவந்த போதே ஊர் ஊருக்கு ரசிகர் மன்ற பேனர்கள் எல்லாம் வைக்கப்பட்திருந்தன. 'யாருய்யா இது... யாருன்னே தெரியாது, ஆனா ரசிகர் மன்றமெல்லாம் இருக்கு' என்று அனைவருக்கும் கேள்வி எழுந்தது.
 

rithesh

 

அந்தப் படம் வெளிவரும் முன்பே, 'சின்னப்புள்ள', 'கானல் நீர்' போன்ற படங்களில் நடித்திருந்தார் ரித்திஷ். அப்பொழுதே தனக்கென ரசிகர் மன்றங்களை அமைத்துக்கொண்டார். அந்த சமயத்தில் வடபழனியில் ஓடிய பல ஆட்டோக்களில் இவரது படம் இருந்தது. வடபழனியில் தலைமை ரசிகர் மன்றமும் இருந்தது. ஊர் ஊருக்கு மன்றங்கள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு உதவி, முதியோருக்கு உதவி என அவ்வப்போது ரித்திஷ் குறித்து செய்திகள் வெளிவந்தன. 'நாலு பேர் சேர்ந்து சென்னைக்குப் போய் உங்களுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்குறோம்னு சொன்னா காசு தாறாராம்' என்று ஊர் ஊருக்குப் பலர் கிளம்பினார்கள். அந்த அளவுக்கு வாழும் வள்ளலாய் கொஞ்ச நாட்கள் இருந்தார் ரித்திஷ். 'நாயகன்' படத்தை ஓரிரு அரங்குகளில் நூறு நாட்கள் ஓட்டினார். இவர் செய்வது வெட்டிச் செலவு என்று அப்போது பலர் கூறினார்கள். ஆனால், 'நட்சத்திர ஜன்னலில்', 'வெற்றிக்கொடி கட்டு' போன்ற பாடல்களில் ஒரே பாட்டில் முன்னேறும் ஹீரோ போல, முதலில் சினிமா, அப்புறம் அரசியல், நேரே நாடாளுமன்றம் என்று முன்னேறினார் ரித்திஷ்.
 

எங்கிருந்து ஒருவருக்கு இவ்வளவு பணம் என்ற கேள்வியும் அதன் பின் பல யூகங்களும் தொடர்ந்து வந்தன. ரித்திஷ், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரனின் பினாமி எனவும் சுதாகரனின் பணம்தான் இப்படி விளையாடுகிறது என்றும் சிலர் கூறினார்கள். அது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ரித்திஷ். தான் திமுக முக்கியஸ்தர் சுப.தங்கவேலனின் உறவினர் எனவும், தனக்கு பல தொழில்கள் இருப்பதாகவும் பதில் கூறினார் ரித்திஷ். பிறகு ராமநாதபுரத்தில் இவருக்கும் இவரது தாத்தா என சொல்லப்பட்ட தங்கவேலனுக்கும் மோதல் உண்டானது. திமுகவில் அழகிரி அணியின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருந்தார் ரித்திஷ். திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட போதும் சில நாட்கள் அவருடன் தொடர்ந்தார். பின்னர், அங்கு தனக்கு எதிர்காலம் இல்லையென உணர்ந்து அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலில் தினகரனை ஆதரித்த இவர் பிறகு எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்தார். 
 

ritheesh

 

தன்னை டாக்டர் என்று சொல்லிக்கொண்டு சினிமாவுக்குள் வந்த 'பவர்ஸ்டார்' சீனிவாசனின் முன்னோடி இவர் என்று சொல்லலாம். ரித்திஷைப் போலவே சினிமாவில் அதிரடி ஹீரோவாக நடித்து, சென்னையில் ஒரு திரையரங்கை கான்டராக்ட் எடுத்து தனது 'லத்திகா', 'ஆனந்தத்தொல்லை' படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட்டி, மெல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கலந்தார் சீனிவாசன். பிறகு, அங்கு கண்டுகொள்ளப்படாமல் போக சினிமாவில் வாய்ப்புகள் வந்து பிஸியானார். இப்போது தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், ஜே.கே.ரித்திஷ் அளவுக்கு பவர்ஸ்டார் அரசியலில் வெற்றி பெறவில்லை. எப்படி வந்தார், எப்படி வளர்ந்தார் என பலரையும் புருவம் உயர்த்த வைத்த வகையில் ரித்திஷ் வாழ்க்கை தனித்துவம் வாய்ந்ததுதான்.      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.