Skip to main content

போனில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்; நன்றி தெரிவித்த படக்குழு!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

Rajinikanth praises Writer movie team

 

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் 'ரைட்டர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி போலீசாக நடித்துள்ளார். திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் தனது அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை பேசியுள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

ad

 

இந்நிலையில் ரைட்டர் படத்தை பார்த்த ரஜினிகாந்த் தயாரிப்பாளர் பா. ரஞ்சித், இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு, படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சுழற்சியை நோக்கி நகரும் விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.  

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story

“அசிங்கப்படுத்தக்கூடிய முயற்சியில் தான் வந்தாங்க” - சமுத்திரக்கனி பகிர்வு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about adutha saattai release experience in Yaavarum Vallavare press meet

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது சமுத்திரக்கனியிடம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரொம்ப அரிதாக மரியாதை கிடைப்பது தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி, “அப்படியெல்லாம் இல்லை. சின்ன படங்கள் எடுத்தவர் பெரிய ஆளாக இருந்திருக்க வேண்டும். அவ்வுளவுதான். படத்தில் சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் கிடையாது. இவுங்க ஒரு அளவு கோல் வச்சிருக்காங்க. சின்ன பட்ஜெட்டில் எடுத்த படங்கள் 300 கோடி கலெக்ட் பண்ண படமெல்லாம் இருக்கு. 200 கோடியில் பண்ண படமெல்லாம் ஓடாமலும் இருக்கு. அப்போ எது சின்ன படம். பெரிய படம். தரம் என்பது படைப்பில் இருக்கக்கூடியது தான். அதை யார் எடுத்து சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். அளவீடுகளும் மதிப்பீடுகளும் வைக்கக் கூடியவங்க இந்த தளத்திலே இல்லாவதர்களாக இருக்காங்க. 

நான் நடித்த அடுத்த சாட்டை படம் ரிலீஸாகும் போது பயங்கர மழை. முதல் நாள் முதல் காட்சிக்கு தியேட்டருக்கு வர ரசிகர்கள் தடுமாறுனாங்க. பெரிய படமென்றால் குடை புடிச்சிகிட்டு வருவாங்க. இந்த படத்துக்கு பார்த்துகுவோம் என இருந்துட்டாங்க. வெள்ளி, சனி ஞாயிறு... நான் யார்கிட்ட பணம் வாங்கி படத்தை ரிலீஸ் பண்ணேனோ அவுங்க ஞாயிற்றுக்கிழமை என் ஆபிஸுக்கு வந்து நின்னுட்டாங்க. அவுங்களுக்கு கொடுக்கனும்-னா உழைச்சு சம்பாதிச்சு தான் கொடுக்கனும். அப்படி ஒரு நிலைமை எவனுக்குமே வரக் கூடாது. எனக்கு இறைவன் நடிப்பு என ஒன்னு கொடுத்ததால் தப்பிச்சேன். ஒரு எளிமையான ஒருத்தன் அப்படி மாட்டியிருந்தால் என்னவாயிருப்பான். உண்மையாகவே நம்மை அசிங்கப்படுத்தக்கூடிய முயற்சியில் தான் வந்து நின்னாங்க. எங்க போய் சொல்றது. எனக்கு தெரியும் படம் நல்ல படம், தகுதியான படம். சமூகத்துக்கு தேவையான படம். அந்த முடிவை எடுப்பவர்களுக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. அப்படியே குத்தி கொன்னாங்க. அடுத்த வாரம் படம் தியேட்டர்ல இல்ல. ஆனால், கடன் வாங்கி அவுங்களுக்கு நான் காசு கொடுத்தேன். இது மாதிரி அனுபவம் தான் அடுத்து இது போன்ற படைப்பு எடுக்குறதுக்கு தூண்டவே மாட்டேங்குது. மனசே வரமாட்டேங்குது” என்றார்.