Skip to main content

டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - ரஜினி எச்சரிக்கை 

Published on 19/11/2018 | Edited on 19/11/2018
rajini

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள '2.0' படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்....

"நம் அன்புத்தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்க்கானும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப் படவேண்டும்.

1 திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே யாருக்கும் விற்கக்கூடாது. 

2 ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது.

இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என வெளியிட்டுள்ளனர். இத்தனை நாட்களாக ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில நிர்வாகிகள் 200 ரூபாய் டிக்கெட்டை, 2000, 3000 என்று விற்று வந்தனர். இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி மன்றத் தலைமையில் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் அதைப் பற்றி முடிவு எடுக்கவில்லை''-ரஜினிகாந்த் பேட்டி

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
nn

இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான தேர்தல் முடிவுகள் 04-06-24 அன்று  வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.

இந்நிலையில் இமயமலை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் திமுக கூட்டணி தலைவர், என்னுடைய அருமை நண்பர், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியே என்னுடைய நண்பர் சந்திரபாபுநாயுடு ஆந்திர பிரதேசத்தில் பெரிய வெற்றி அடைந்துள்ளார். அவருக்கும் என என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மத்தியில் என்டிஏ மூன்றாவது தடவையாக ஆட்சி அமைக்கப் போகிறது. மூன்றாவது முறை மோடி பிரதமராக பதவி ஏற்கப் போகிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் 'நீங்கள் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா? எனக் கேட்டதற்கு, ''இன்னும் அதைப் பற்றி முடிவு எடுக்கவில்லை'' என்றார்.  

Next Story

'நோ கமெண்ட்ஸ்...'- இமயமலை செல்லும் ரஜினி!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
 'No comments...'- Rajini going to the Himalayas

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். இதற்கிடையில் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில்  நாளை தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று  நாட்கள் தியானத்தில் ஈடுபட உள்ளார். அதேநேரம் நடிகர் ரஜினிகாந்த்  இன்று இயமலை கிளம்பியுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்தை சூழ்ந்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

'மீண்டும் மோடி ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''சாரி பொலிடிகல் கேள்வி கேட்காதீர்கள்' என்றார். இசையா? கவிதையா? என்ற போட்டி தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது என்ற கேள்விக்கு, 'அண்ணா... நோ கமெண்ட்ஸ்' என கையெடுத்து கும்பிட்டார்.  'ஆன்மீகம் என்பது சாந்தி சமாதானம் அது உலகத்துக்கே தேவை. கேதர்நாத், பத்ரிநாத், பாபா கேவ்க்கு போயிட்டு வரலாம்னு இருக்கேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.