Skip to main content

ஒரே களத்தில் 15வது முறை - தீபாவளியை குறி வைக்கும் ரஜினி - கமல்?

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

rajini jailer kamal indian 2 both team are planning to release his movies on diwali 2023

 

தமிழ் சினிமாவில் ஆளுமைகளாக திகழும் ரஜினி மற்றும் கமல்ஹாசன் தற்போது 'ஜெயிலர்' மற்றும் 'இந்தியன் 2' படங்களில் நடித்து வருகின்றனர். 

 

'ஜெயிலர்' படத்தை நட்சத்திரப் பட்டாளத்தோடு நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்க கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  

 

இந்த நிலையில், 'ஜெயிலர்' மற்றும் 'இந்தியன் 2' படங்களின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களுமே வரும் தீபாவளியை முன்னிட்டு ஒரே தேதியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொங்கலை முன்னிட்டு முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு ரஜினி, கமல்ஹாசன் படங்கள் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

ரஜினி மற்றும் கமல் படங்கள், கடைசியாக 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. 'ஜெயிலர்' மற்றும் 'இந்தியன் 2' ஒரே தேதியில் வெளியாகும் பட்சத்தில் 18 ஆண்டுகள் கழித்து 15வது முறையாக இருவரின் படங்களும் ஒரே தேதியில் வெளியாகும். 

 

இதற்கு முன்னதாக 14 முறை ஒரே தேதியில் இருவரின் படங்களும் ரிலீஸாகியுள்ளது. 1983 - ரஜினி(தங்கமகன்), கமல்(தூங்காதே தம்பி தூங்காதே), 1984 - ரஜினி(நல்லவனுக்கு நல்லவன்), கமல்(எனக்குள் ஒருவன்), 1985 - ரஜினி (நான் சிகப்பு மனிதன்), கமல்(காக்கி சட்டை), 1985 - ரஜினி(படிக்காதவன்), கமல்(ஜப்பானில் கல்யாணராமன்), 1986 - ரஜினி(மாவீரன்), கமல்(புன்னகை மன்னன்), 1987 - ரஜினி(மனிதன்), கமல்(நாயகன் ), 1987 - ரஜினி(வேலைக்காரன்), கமல்(காதல் பரிசு), 1989 - ரஜினி(மாப்பிளை), கமல்(வெற்றிவிழா), 1990 - ரஜினி(பணக்காரன்), கமல்(இந்திரன் சந்திரன்), 1991 - ரஜினி(தளபதி), கமல்(குணா), 1992 - ரஜினி(பாண்டியன்), கமல்(தேவர் மகன்), 1995 - ரஜினி(பாட்ஷா, கமல்(சதிலீலாவதி), 1995 - ரஜினி(முத்து), கமல்(குருதிப்புனல்), 2005 - ரஜினி(சந்திரமுகி), கமல்(மும்பை எக்ஸ்பிரஸ்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Next Story

உத்தம வில்லன் நஷ்டம்...திருப்பதி பிரதர்ஸ் கண்டன அறிக்கை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Thirrupathi brothers about uttama villain issue

கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் உத்தம வில்லன். இப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர், போஜ குமார், ஆன்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்  இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் இப்படம் தொடர்பாக யூடியுப் சேனல் ஒன்று பொய்யான தகவல்களைப் பரப்புவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, ரஜினிமுருகன் போன்ற வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான், கமலஹாசனை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான  உத்தம வில்லன், எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது கமலஹாசனுக்கும் நன்றாகவே தெரியும். 

உத்தம வில்லன் திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசனும் அவரது சகோதரர் அமரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான யூட்யூப் சேனல் ஒன்று உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.