Skip to main content

நடிகை ராதிகா ஆப்தேவிற்கு கொரோனா பாதிப்பா...?

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ரவுண்டுகட்டி அடிக்கும் நடிகை ராதிகா ஆப்தே தமிழில் பிரகாஷ் ராஜுடன் தோனி மற்றும் ரஜினியுடன் கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

vdvd

 

 

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆனார். இருந்தும் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தாமல் இருக்கும் நிலையில் சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ள தன் படத்தை சமூக வலைத்தளத்தில் ராதிகா ஆப்தே பதிவிட்டார். அதில்...'தனக்கு கொரோனா இல்லை என்றும், லண்டனுக்கு சில நாட்களுக்கு முன் தான் வந்தேன், அதனால் தான் சோதனைக்காக மருத்துவர்களை அணுகினேன்.வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''நான் இங்கு புகழுக்காக இல்லை'' - ராதிகா ஆப்தே! 

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
gsgs

 

பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த 'தோனி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை ராதிகா ஆப்தே. பின்னர் ரஜினியின் 'கபாலி' மூலம் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தார். அதேபோல் ஹிந்தி படங்களிலும் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து அங்கேயும் பிரபலமான இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் நடிப்பு குறித்து பேசியபோது... 

 

"நான் இங்கு புகழுக்காக இல்லை. நடிப்பின் மூலம் கிடைக்கும் கவனம் எனக்குச் சில சமயங்களில் பிடிக்கும். ஆனால், வெற்றி தோல்விகளை நான் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு நடிகருக்குப் பாராட்டுகள் வேண்டும். முதுகில் தட்டிக் கொடுக்க வேண்டும். பாராட்டுகளை விரும்பும் அதே நேரத்தில் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு துவண்டு விடாமல் இருக்க வேண்டும். எனவே, என் அணுகுமுறையில் ஒரு சமநிலை உண்டு.


நான் இதற்கு முன்னால் செய்த முயற்சிகளுக்குத் தொடர்ந்து சவால் விடுக்கவே நினைக்கிறேன். சவுகரியமான ஒரு வட்டத்தில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

'பணத்துக்காக தவறு செய்தேன்'... ராதிகா ஆப்தே ஓபன் டாக்

Published on 20/06/2018 | Edited on 20/06/2018
radhika apte

 

 

 

'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே சர்ச்சையான காட்சிகளில் கூட தைரியமாக நடிக்க கூடியவர். அவ்வப்போது இவர் நடித்த கவர்ச்சி காட்சிகளின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதனால் பிரபலமாகும் இவர் சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார்.  இந்நிலையில் தன் சினிமா வாய்ப்பு குறித்தும், செய்த தவறுகள் பற்றியும் இவர் பேசும்போது...

 

 

 

"சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. அப்படியே பின்புலம் உள்ளவர்கள் உறவினர்கள் உதவியால் வாய்ப்புகள் பெற்றாலும் திறமை இருந்தால்தான் நிலைக்க முடியும். நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் தவறாகிவிட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன்" என்றார்.