Skip to main content

“பாஜக... வெறும் தேங்காய் மூடி கச்சேரிதான்”- ராதாரவி கலகல பேச்சு

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, ஹரி உத்ரா இயக்கத்தில், சிவநிஷாந்த், ஆன்டனி, அய்ரா, திவ்யா உள்ளிட்டோர் நடிக்கும் படம், கல்தா.  கேரள மாநிலத்தில் இருந்து, மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து, தமிழக எல்லைக்குள் கொட்டுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இந்த படத்தின் கதை கருவும் இதுதான். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார்.
 

radharavi

 

 

அப்போது அவர் பேசுகையில், “மக்கள்,  தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் எதற்காக அரசியல்வாதிகள் வோட்டு போட இரண்டாயிரம் ரூபாய் தருகிறார்கள் என்றும், எதற்காக இலவசம் தருகிறார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டும். உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, ஏன் வோட்டுக்கு காசு தருகிறாய் என்று மக்கள் யோசிக்க வேண்டும். அப்படி நீங்கள் எல்லாம் யோசித்தீர்கள் என்றால் படத்தில் வருவதுபோன்று குப்பைகளை கொட்டாமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்காகதான் மக்கள் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை உருவாக்குகிறார்கள் என்று சொன்னேன். 

சும்மா அரசியல்வாதி, அரசியல்வாதி என்று காரணம் சொல்கின்றனர். பாவம், அரசியல்வாதிகள் படுகின்ற கஷ்டம் நமக்குதான் தெரியும். அரசியல்வாதிகள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள் என்று நாம் சொல்கிறோம். இதோ கட்சி மாறினார் ராதாரவி பாஜகவில் நல்லா சம்பாதிக்கிறார் என்று பல விஷயங்கள் சொல்கிறார்கள்.
 

day night


போயும்  போயும் பாஜக பணம் தருவார்கள் என்று சொல்லலாமா? நான் மேடையிலேயே சொல்கிறேன், ஏன் அவர்களிடமே சொல்லியிருக்கிறேன். பணம் தரும் கட்சியா அது? வெறும் தேங்காய் மூடி கச்சேரிதான். அவர்களுடைய எண்ணம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். அதனால் அனைத்து அரசியல்வாதிகளும் பணம் வாங்கிக்கொண்டு சந்தோசமாக இல்லை, சிரமப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒருசிலர் இருக்கிறார்கள் பணக்காரர்களாக மாறி மல்டி மில்லியனர்ஸா இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் அலெக்ஸாண்டர் வெறும் கையை தொங்கப்போட்டு போனதுபோலதான் போக வேண்டும்” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.