Skip to main content

"அசுரன் படம் பார்த்தேன், சிம்பு மேல கோபம் வந்தது" - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சிம்பு நடிக்க இருந்த படம் 'மாநாடு'. இப்படத்தின் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால் திடீரென சிம்பு இப்படத்தில் நடிக்க மாட்டார் எனவும் 'மாநாடு' படத்தில் வேறு ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். காரணம் யாராக இருக்குமென்பதை சினிமா ரசிகர்கள் கணித்தார்கள். அடுத்த நாளே சிம்பு தரப்பிலிருந்து 'மகாமாநாடு' என்ற பெயரில் படம் அறிவிக்கப்பட்டவுடன் சர்ச்சை இன்னும் அதிகமானது. சுரேஷ் காமாட்சியை சந்தித்தோம். அவரது இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் 'மிக மிக அவசரம்' படத்தின் பணிகளில் இருந்தார். நமக்கு சிறிது நேரம் ஒதுக்கி பேசினார்...

 

suresh kamatchi



மாநாடு... என்னதான் நடந்தது?

நான் சிம்புவை ஒரு நடிகராகப் பார்க்காமல் என்னுடைய தம்பியாகத்தான் பார்த்தேன். என்னிடம் நிறைய பேர் 'அவருடன் பழக வேண்டாம், படம் பண்ண வேண்டாம், அவர் படப்பிடிப்பிற்கு வர மாட்டார்' என்று சொன்னார்கள். சிம்பு அவர் மனதில் தோன்றுவதை பேசுகிறார், நல்லவராகத்தான் இருப்பார் என்று நினைத்துதான் அவருடன் இருந்தேன். நான் அவரை தேடிப் போய் படம் பண்ணலாம்னு சொன்னது கிடையாது. அவராகவேதான் என்னிடம் வந்து 'உங்களால் முடியும் நாம் படம் பண்ணலாம்'னு சொன்னார். 'நான் சின்ன தயாரிப்பாளர் எனக்கு யாரும் பைனான்ஸ் பண்ண வர மாட்டார்கள்' என்று சொன்னேன். அவரே நான் உங்களுக்கு தேடிக் கொடுக்கிறேன்னு கூட சொன்னார். எனக்கு நன்றாகத்  தெரியும் சிம்பு படத்துக்கு யாரும் பைனான்ஸ் பண்ண மாட்டார்கள். இருந்தும் என்னை நம்பி ஒருவர் பைனான்ஸ் பண்ண முன் வந்தார். எல்லாம் ரெடியாகிப்  போகும்போது அவர் மாற ஆரம்பித்தார். இன்னைக்கு ஒன்று சொல்வார் நாளை மற்றொன்று சொல்வார். எல்லாத்தையும் பொறுத்து, கடந்து போனேன். ஒரு ஸ்டேஜ்க்கு மேல என்னால் முடியவில்லை. என்னை நம்பி வந்த பைனான்சியரை கைவிடக் கூடாது என்ற கட்டாயத்தில் இருந்தேன். சிம்புவை நம்பி யாரும் வர மாட்டார்கள். அதைத் தாண்டி வந்தவருக்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவை அறிவித்தேன். எப்படியாவது நான் படம் பண்ணி ஏற்கனவே கமிட் ஆனவர்களுக்கு உண்மையாக இருக்கணும்.

சிம்பு ரசிகர்கள் உங்களுடன் சமூக ஊடகங்களில் பேசி வந்தார்கள். இப்போது அவர்களும் கடும் ஏமாற்றத்தில் இருக்கிறார்களே?

ஆமா... சிம்பு ரசிகர்கள் படத்தை பற்றி அப்டேட்  கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்டேட் சொல்லுங்க அப்டேட் சொல்லுங்கன்னு ரசிகர்கள் போய் சிம்பு கிட்ட கேக்கணும். என்னை கேட்டால் என்ன சொல்வது? நடந்த உண்மையை நான் அவர்களிடம் அப்படியே  சொன்னால் அது சர்ச்சை ஆகிவிடும். சிம்பு ட்விட்டர்ல இல்லாததால அவர் பத்திரமா இருக்கார். அவர் தன்னுடன் யாராவது போட்டோ எடுத்து கொண்டால் அதை வச்சிகிட்டே ஓட்டிடுவார். அதுவே அவருக்கு ஒரு படம் பண்ண மாதிரி இருக்கும். அவரோட ரசிகர்களுக்கும் இதுவே போதும்னு அவர் தெளிவாக இருக்காரு. எங்கயாவது போகும்போது ஒரு ஃபோட்டோ, யாரையாவது கட்டிப்பிடிச்சு ஊக்குவிக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோ அப்பப்ப போட்டு ரசிகர்களை எங்கேஜ்டா வச்சிருக்கார். அதையும் மீறி படத்தை பற்றி யாருக்காவது இன்பாக்ஸ்ல சொன்னால் அதை போன்ல ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்து ட்விட்டர்ல பதிவிட்டிடுருவாங்க.
 

 

manadu team



சிம்பு தரப்பிலிருந்து எதுவும் பேசினார்களா?

நான் படம் ட்ராப்னு சொன்னதுக்குப் பிறகும் கூட பேசிப் பார்த்தேன். அவர் அந்த மனநிலையிலிருந்து மாறவில்லை. நான் இன்னும் ஆசைப்படுவது என்னவென்றால் சிம்பு ஒரு நல்ல கலைஞன், அவர் திரும்பவும் நடிக்கணும். இப்போ அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கு. படம் பார்த்தேன், தனுஷை, அவரோட அர்ப்பணிப்பை  பாராட்டாம இருக்க முடியாது. யோசித்துப் பார்க்கும் பொழுது எனக்கு சிம்பு மேல் கோபம்தான் வருகிறது. இவ்வளவு திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்துகிடப்பதை பார்த்து கோபம்தான் வருகிறது.

மகாமாநாடு என்று அவர்கள் படம் அறிவித்திருக்கிறார்களே?

அதை அவர்கள் பண்ணுவார்கள். டி.ராஜேந்தர் அண்ணன் பண்ணுவார். 125 கோடி செலவு பண்ணி சிம்புவே டைரக்ஷன் பண்ணாலும் பண்ணுவார். இல்லைன்னா டி.ராஜேந்தர் அண்ணன் பண்ணுவார். என்னிடம் கேட்டால் மாநாடு தலைப்பை கொடுப்பேன். நான் ஆசைப்படுவது, அவர் நடிக்கணும் மீண்டு வரணும். என் மீது எங்கு தவறு உள்ளது? நீங்க கேட்டதுனால நான் வெங்கட்பிரபு கிட்ட பேசி கமிட் பண்ணேன். என்னதான் பிரச்னை என்று அவர்கிட்டதான் கேக்கணும்.  
   

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

“ரொம்ப அப்டேட் கேட்காதீங்க... தவறான டிசிஷன் எடுக்க வாய்ப்பிருக்கு” - சிம்பு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 "Don't ask for too many updates...there is a chance of taking a wrong decision" - Simbu speech

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது.

 

இதில் பேசிய நடிகர் சிம்பு, ''ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அப்டேட் கேக்குறீங்க. நிறைய அப்டேட்ஸ் வேணும்... அப்டேட்ஸ் வேணும்னு கேட்குறீங்க. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கே ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன். டைரக்டராக இருக்கட்டும், ஹீரோவாக இருக்கட்டும் அந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என்று சொல்லும் போது ஒரு தவறான டிசிஷன் எடுக்கக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய ரிக்வெஸ்ட் என்னவென்றால் உங்களை சந்தோசப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலையே.

 

எனவே, எங்களுக்கு அதற்கான களத்தை கொடுத்தீர்கள் என்றால்தான் நல்ல படங்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களை தூக்கி மேல வைக்கணும்னு நினைக்கிறேன். என் படத்துக்கு மட்டும் இல்ல. எல்லா படத்துக்கும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு நல்ல படம் கொடுப்பதற்கு நாங்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்க பத்து தல டைரக்டர் சொல்ல சொன்னாரு. அதனால தான் சொன்னேன்.'' என்றார். 

 

 

Next Story

''முகத்துல தான் வைத்திருப்பேன் தாடி... எதையுமே மறைக்க மாட்டேன் மூடி''-டி.ஆர் பேட்டி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

TR

 

உடல்நலக்குறைவு காரணமாக உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இதற்கு முன்பே சென்னை உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தமிழக முதல்வர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன். நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி. இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன் ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன். ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி  எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார்.