Skip to main content

‘தை மகள் வந்தாள்’-  பிரசன்னா ட்வீட்

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த  ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
 

sneha prasana

 

 

இதனையடுத்து உடனடியாக பல படங்களில் நடித்தார். ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.
 
2009ஆம் ஆண்டு வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்தார் சினேகா. பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து பிரசன்னாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.  அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
 
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக  பட்டாஸ் படத்தில் நடித்தார் சினேகா. இந்த படம் அண்மையில்தான் வெளியானது. இந்த படத்தில் நடிக்கும்போது சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. படத்தில் நடித்து முடித்தபின் பிரசவமாக இருக்கும் காரணத்தால் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் தங்களுக்கு மகள் பிறந்திருப்பதாக சமூக வலைதளத்தில், “தை மகள் வந்தாள்” என்று பதிவிட்டு தெரிவித்தார் பிரசன்னா. திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை சினேகாவிடம் ரூ. 25 லட்சம் மோசடி

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

private company has cheated actor Sneha buying Rs 25 lakh

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவரும் சினேகா, தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் ஏமாற்றிவிட்டதாக கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

ad

 

இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், "கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ. 25 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அந்நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது மாதந்தோறும் ரூ. 1.80 லட்சம் கிடைக்கும் எனக் கூறினார்கள். அதை நம்பி நானும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன். இது தொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி மாதந்தோறும் தருவதாக கூறிய பணத்தை அந்நிறுவனம் தராமல் என்னை ஏமாற்றியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரைப் பெற்றுக்கொண்ட கானத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

Next Story

வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

Shot Boot Three

 

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் வைத்யநாதன், தற்போது  ‘ஷாட் பூட் 3’ என்ற படத்தை இயக்குகிறார். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல வீணை கலைஞரான ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

இப்படத்தின் பணிகள் நேற்று (15.09.2021) சென்னையில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.