Skip to main content

இணைந்தது பாகுபலி-கே.ஜி.எஃப் கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
prabhas -prasanth kneel

 

 

தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான பிரபாஸ், பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகங்களின் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் பெரிய நட்சத்திரமாக உயர்ந்தார். அதனைத்தொடர்ந்து, 350 கோடி ரூபாய் செலவில் உருவான, சாஹோ  படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. 

 

சாஹோ  படத்திற்கு அடுத்ததாக, பிரபாஸ் தற்போது 'ராதே ஷ்யாம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு, 'ஆதி புருஷ்' படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட இருக்கிறது. இந்தநிலையில், கன்னடம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 'கே.ஜி.எஃப்' படத்தின் இயக்குனர், பிரசாந்த் நீல்லோடு, பிரபாஸ் இணைவதாக, தகவல் வெளியானது.

 

இந்தநிலையில், பிரபாஸ், பிரசாந்த் நீல்லோடு இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணையும் படத்திற்கு, 'சலார்'  என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரியிலிருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த ஹொம்பாளே நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. மேலும் சாலார் படம், அனைத்திந்திய படமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்