Skip to main content

சூர்யாவிற்கு ஜோடியாகும் 'புட்ட பொம்மா' நடிகை 

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

சூர்யா - 'இறுதிச்சுற்று' சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகியுள்ள சூரரைப்போற்று படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

 

csc

 

 

'அருவா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன் நாயகியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனால் தேதி பிரச்சனை காரணமாக யாரும் ஒத்துவராததால் தற்போது நடிகை பூஜா ஹெக்டேவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பூஜாவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. டி இமான் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு நூறு புலி நகமும் இவன் மாரறைய...” - மிரட்டும் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ்

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

 Klims of 'Kangwa' released

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருடத் தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்பு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்திருந்தது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

'கல்விக்காக அக்கறையோடு செயல்படும் நடிகர் சூர்யாவுக்கு எனது பாராட்டு'-தமிழக முதல்வர் நெகிழ்ச்சி  

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

nn

 

சென்னையில் இன்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் சூர்யா பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

 

nn

 

இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், 'ஏழை எளிய மக்களின் கல்விக்காக தொடர்ந்து அக்கறையோடு செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவுக்கு எனது பாராட்டு. சட்டத் தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணிபுரிவது இவை பயிற்சி செய்வது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவை இயக்குநராகக் கொண்ட சத்திய அகாடமியை தொடங்கி வைத்தேன். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இந்த அகாடமி மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஜெய் பீம் படத்துக்கு பிறகு நீதியரசர் சந்துருவுடன் சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் சூர்யா, ஞானவேலுக்கு எனது பாராட்டு' என தெரிவித்துள்ளார்.