Skip to main content

'குக்கு வித் கோமாளி' பவித்ராவிற்கு சமந்தா அளித்த பதில்!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

samantha

 

'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ரா, தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தெறி படத்தில் நடிகை சமந்தாவின் கதாபாத்திரமான மித்ரா கதாபாத்திரத்தை மறுவுருவாக்கம் செய்யும் வகையில் உடையணிந்து எடுத்த புகைப்படத்தை, பவித்ரா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். நடிகை சமந்தாவின் தோற்றத்தை அப்படியே ஒத்து இருந்த அந்தப் புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு, இணையத்தில் வைரலானது.

 

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் பவித்ராவின் பெயரில் போலி முகவரியை பயன்படுத்தும் மர்ம நபர் அப்புகைப்படத்தை பகிர்ந்து, நான் உண்மையிலேயே உங்களைப் போல இருக்கிறேனா மேம் என சமந்தாவிடம் கேள்வியெழுப்பினார். அது, போலி முகவரியில் இருந்து பகிரப்பட்டது என்பதை கவனிக்காத சமந்தா, "நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள்" எனப் பதிலளித்தார். சமந்தாவின் இந்தப் பதில் பவித்ராவின் கவனத்திற்கு வர, அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முதலில் உங்கள் பதிலுக்கு நன்றி மேம். அந்த ஐடி எனக்கு சொந்தமானது அல்ல. இந்த ஃபோட்டோஷூட் "மித்ரா" கதாபாத்திரத்தை மீண்டும் மறுஉருவாக்கம் செய்யவேண்டும் என்பதற்காக செய்தோம். நாங்கள் அனைவரும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்பதை மறந்துவிடக் கூடாது. நான் உங்களைப்போல 1% கூட இல்லை. மீண்டும் ஒருமுறை நன்றி மேம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கக் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple


வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்  நடிகர் நடிகைகள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple

 

இந்நிலையில் நேற்று பொற்கோவிலுக்கு வந்த பிரபல நடிகை சமந்தா ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்துள்ளார். பின்பு தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Next Story

கோஷ்ட் Vs பிரின்ஸஸ்... பாலிவுட்டில் மிரட்ட இருக்கும் சமந்தா

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

Samantha debuting Bollywood movie

 

யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘குஷி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக இருக்கும் சமந்தா, தற்போது இந்தி திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். 

 

அதன்படி பாலிவுட் இயக்குநர் அமர் கௌசிக் இயக்கும் புதிய படத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளாராம். அதில் ஒன்று இளவரசி கதாபாத்திரம் என்றும், மற்றொன்று பேய் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள சமந்தா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 

இதற்கு முன்பு பாலிவுட் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இத்தொடர் வெளியாகி பெரும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரில் வருண் தவானுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.