Skip to main content

ஸ்ரீரெட்டியை கிண்டலடித்த தயாரிப்பாளர்... எதிர்ப்பு தெரிவித்த பா.ரஞ்சித்! மேடையில் கருத்து மோதல் 

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

இயக்குனர் கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன் உள்பட பலரும் நடித்துள்ள 'பற' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் திரைத்துறையில் தனது அனுபவங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொண்டார்.

 

srireddy



தொடர்ந்து அவர், "நீங்க யாரும் என்னை தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க செலவுல, நான் என் கருத்தையும் கொஞ்சம் சொல்லிக்கிறேன்" என்று கூறிவிட்டு "சமீபமாக ஆன்லைன்ல பெண்களும் ஒரு தப்பு பண்ணுறாங்க. பெரிய ஆளுங்களை தாங்கள் டச் பண்ண முடியலைன்னாலும் அவுங்கள பத்தி தப்பா சொல்லி டேமேஜ் பண்ணுறாங்க" என்று 'மீடூ' குறித்து விமர்சித்தார். பிறகு, " இதெல்லாம் ஸ்ரீரெட்டி என்று ஒரு பொண்ணு ஆரம்பிச்சது. அவங்க ஒழுக்கம் தவறாத ஆந்திர கண்ணகி" என்று கிண்டலாகக் கூறி "அவுங்கதான் இந்த டைரக்டர் என்னை கூப்பிட்டார். அந்த டைரக்டர் என்னை கூப்பிட்டார்னு சொன்னாங்க. நான் கேக்குறேன், நீ எத்தனை பேரை கூப்பிட்ட?" என்று பேசப்பேச பின்னே நின்ற பெண் தொகுப்பாளர் நெளிந்து ஒரு கட்டத்தில் திரும்பி நின்றுகொண்டார்.

தயாரிப்பாளர் ராஜன், "சமீபத்தில் குஷ்பூ ஒருத்தனை அடிச்சிருக்காங்க. அது கரெக்ட். அடிக்கணும், நம்ம பெண்களை தவறா பயன்படுத்த நினைச்சா அடிக்கணும். ஆனா, அந்த அடிப்படையில ஒரு பொண்ணு முந்தாநேத்து வைரமுத்துவை தரக்குறைவா பேசியிருக்கு. கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் வரிசையில் தமிழைக் காப்பாற்றுபவர் வைரமுத்து. அவரை இப்படியெல்லாம் சீண்டுவது தவறு. எவ்வளவு கஷ்டப்பட்டு உயர்ந்திருக்காங்க அவங்க. அவர்களைப் போய் ஒரு சின்ன ஆசைக்காக சிதைக்கிறீங்க? அப்படிப் பார்த்தால், என்கிட்டே சில ஆளுங்க இருக்காங்க, பார்த்துக்கங்க" என்று தொடர்ந்து மீடூ குறித்தும் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்த பெண்கள் குறித்தும் கடும் விமர்சனத்தை வைத்தார். இவருடைய பேச்சுக்கு கைதட்டல் எழுந்தது.

இவருக்குப் பின் நிகழ்ச்சியில் பேச வந்த இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குனரை வாழ்த்திவிட்டு இறுதியாக தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியது குறித்த தனது கருத்தை தெரிவித்தார். "அய்யா ராஜன் அவர்கள் பேசுனாங்க. அதுல பெண்கள் குற்றச்சாட்டு வைப்பதை பற்றி மட்டும் பேசுவது தவறு. அவர்களது குற்றச்சாட்டுகளை ஆராய வேண்டும், விசாரிக்க வேண்டும். சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் போக்கு நிறைந்திருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி இருக்கும்போது ஸ்ரீரெட்டி போன்றோர் குற்றச்சாட்டுகளை வைப்பதாலேயே அவர்களை குற்றம் செய்தவர்களாக பார்ப்பதும் அவர்களை குறை சொல்வதும் மிக மிக தவறு. இதை நான் எதிர்க்கிறேன். மகிழ்ச்சி" என்று கூறி தனது பேச்சை முடித்தார்.

பல மேடைகளில் ரஞ்சித், ஏற்கனவே பேசியவர்களின் கருத்தை மறுத்து பேசியிருக்கிறார், தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் நடந்த பல சினிமா விழாக்களில் மேடையிலேயே கருத்து பரிமாற்றங்களும் மோதல்களும் நடந்திருக்கின்றன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.