Skip to main content

தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை நமீதா! 

Published on 24/06/2021 | Edited on 24/06/2021
jffuygig

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகிவருகிறது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. 

 

இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகை நமீதா கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்திகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்பட தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஓர் முக்கியமான செய்தி சொல்றேன்... அது நமது கலாச்சாரமே கிடையாது" - நமீதா

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

namita wishes for tamil new year celebration

 

சித்திரை முதல் நாள், ஆங்கில ஆண்டில் வருகிற 14 ஆம் நாள் (14.04.2023) தமிழ்ப் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் தலைமையிலான  திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. பின்பு 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக அரசு, திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஏப்ரல் 14 ஆம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்திருந்தது.

 

அதன்படியே மக்களும் கொண்டாடி வந்தனர். பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடபட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் ஏப்ரல் 14ஆம் தேதியே தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். 

 

தமிழ்ப் புத்தாண்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மக்கள் புத்தாண்டை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "உங்களுக்கு ஓர் முக்கியமான செய்தியை சொல்ல போகிறேன். அனைவரும் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடி வருகிறோம். மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பிரம்மாண்டமாக வரவேற்கிறோம். ஆனால் அது நமது கலாச்சாரம் கிடையாது. அது நம்முடைய பாரம்பரியம் கிடையாது. 

 

நாம் எல்லாம் பெருமை மிகு இந்தியர்கள். வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வருகிறது. அதனை உங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். காலையில் எழுந்து குளிச்சிட்டு கோவில் போய்ட்டு வாருங்கள். உங்கள் பெற்றோரிடம் ஆசி பெறுங்கள். அதுதான் நம்முடைய கலாச்சாரம். அதுதான் நமது பாரம்பரியம். டிசம்பர் 31 நம்முடைய புத்தாண்டு கிடையாது. ஏப்ரல் 14 ஆம் தேதி தான் நமது புத்தாண்டு" என பேசியுள்ளார்.  

 

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பெருமை மிக்க பாரத நாட்டில் வாழ்கின்ற மிகத் தொன்மையான தமிழர்களாகிய நமது ஒரே புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வருகின்ற சித்திரை 1 ஆம் தேதி மட்டுமே... நிச்சயமாக, ஜனவரி 1 கிடையாது. ஆங்கிலப் புத்தாண்டு என்பது நமது கலாச்சாரமே கிடையாது. அனைவருக்கும் எனது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

 

 

 

Next Story

பொங்கல் விழா கொண்டாடிய நமீதா (படங்கள்) 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சி ஓட்டேரி பகுதியில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா கலந்துகொண்டு பொங்கல் வைத்தார். அதனைத் தொடர்ந்து  கோலப் போட்டி, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பாஜகவினர் பலரும் கலந்து கொண்டனர்.