Skip to main content

தந்தையானார் நடிகர் நகுல்...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
nakul

 

 

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். இந்த படத்தில்  ஒரு இளைஞர் பட்டாளமே நடித்திருப்பார்கள். அதில் ஒருவர்தான் நடிகர் நகுல். 

 

இதன்பின்  2008ஆம் ஆண்டு 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் பெற்று தந்தது.

 

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு, தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பூசி செலுத்திக்கொண்ட 'பாய்ஸ்' நடிகர்!

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

vgdgsbg

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

 

இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் நகுல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், "முதல் டோஸ் போட்டுக்கொண்டேன். நீங்கள் செய்தீர்களா? தடுப்பூசி போடுங்கள்" என பதிவிட்டுள்ளார். மேலும், இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

Next Story

“வாட்சப் ஃபார்வேர்டுகளை நம்பி செல்லப்பிராணிகளை...”- நடிகர் நகுல் வேண்டுகோள்

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 

nakul


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாகக் கடந்துவிட்டது. இதில் நூறு பேருக்கும் மேல் குணமடைந்துள்ளனர். இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் நடிகர் நகுல் கரோனா குறித்து பல வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவது வைரலாகி வருகிறது. இந்நிலையில் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலம் கரோனா பரவாது என்பதைத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “செல்லப்பிராணிகள் கரோனாவைப் பரப்பாது. நிறைய பேர் தங்கள் செல்லப் பிராணிகளை தவிர்க்கிறார்கள். அவர்கள் எவ்வளவு மனுஷத்தன்மை இல்லாமல் இருக்கிறார்கள்!. வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளை நம்பாதீர்கள். செல்லப்பிராணிகளுக்குத் தண்ணீர் வையுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.