Skip to main content

"ஏன் கோபால்... நடிச்சா என்ன?"ன்னு ரஜினி சார் கேட்டார்! - நக்கீரன் ஆசிரியர் பகிர்ந்த 'கலகல' நினைவு 

Published on 17/01/2021 | Edited on 17/01/2021
nakkheeran gopal

 

ஆறு ராஜா, ஸ்வேதா ஜோயல், 'பூ' ராமு உள்ளிட்டோர் நடிப்பில் ஆறு ராஜா எழுதி இயக்கியுள்ள 'பாப்பிலோன்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய நக்கீரன் ஆசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சிலிருந்து ஒரு பகுதி...

 


"பொதுவாகவே நான் இசைவெளியீட்டு விழா போன்ற இதர சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கப்பதில்லை. அவ்விழாக்களை, விழாக்களில் கலந்துகொள்பவர்களை குறையாக சொல்லவில்லை. நமக்கும் அவ்விழாவுக்கும் பெரிய சம்மந்தமில்லை என்பதால் தவிர்க்கிறேன். படம் திரையில் வந்ததும் திரையரங்கில் சென்று பார்க்கலாம் என்பதுதான் என் நோக்கம். இப்போதெல்லாம் பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்து வருகிற நிலையில் ஆறு ராஜா ஒன்னேகால் கோடியில் அவரே நடித்து படம் எடுத்திருக்கிறார்  என்பதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது.பெருமைக்கென்று சொல்லவில்லை. என்னையும் இதுவரை 28 படங்கள் வரை நடிக்க அழைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை உடன்பாடும் இல்லை. இனி நடிக்கப் போறதும் இல்லை. அதனால இன்னும் பத்து படத்திற்கு நடிக்க கூப்பிடுவாங்க. ஏன்னா, இதுவரைக்கும் நடிக்கலைல... முதல் படமே சம்மதிச்சு நடித்திருந்தா இப்ப யாரும் கூப்பிட்டிருக்க மாட்டாங்க.

 

ஒரு நாள் நடிகர் ரஜினி சார் என்னிடம், "ஏன் கோபால்... நடிச்சா என்ன?"ன்னு கேட்டார். "ஏன் சார்... நல்லாதானே போய்ட்டு இருக்கு"னு சொன்னேன். காரணம் நாங்க நக்கீரன் ஆரம்பித்தோம், நக்கீரனா திரிகிறோம். எங்க பொழப்பு வேறு ஒன்றாகத்தான் இருக்கிறது. என் முன்னால் உட்காந்திருக்கும் பெரியவர்கள் போட்ட ரோட்டில்தான் நான் சைக்கிள்ல போய்ட்டு இருக்கிறேன். தாயப்பன் என்னிடம் உங்கள பாக்கணும்னு தம்பி ஆசைப்படுகிறார் என்று பேசத் தொடங்கியதும் எனக்கு தோன்றியது 'நடிக்க ஏதும் அழைப்பதற்காக வந்திருப்பார்களோ' என்று. "இல்ல, இசைவெளியீடு செய்யவேண்டும், அதற்காக உங்களை அழைக்க வந்திருக்கிறோம்" என்றார். உடனே நான், "தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணே... பொதுவாகவே நான் இதை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை" என்றேன். பின்னர் அவர் கூறினார், "இவர் ஒரு ஆர்ட்டிஸ்ட். சந்திரமுகி ஓவியத்தை வரைந்தவர்" என்று கூறியதும், "சரி வருகிறேன்" என்று ஒப்புக்கொண்டேன். அந்த ஓவியம் உயிருள்ளது. அதை வரைந்த கலைஞனுக்கு மரியாதை செய்ய வேண்டும். மேலும் இவர் ஒரு சமூக நோக்கம் உள்ளதாகவும் பொள்ளாச்சி பிரச்னையை தழுவியதாகவும் படத்தை எடுத்திருத்தப்பதால் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று வந்தேன். இந்தப் படம் லாபகரமான படமாக அமையவேண்டும், வெற்றி பெற வேண்டும் ".

 

       

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார். 

Next Story

“அவுங்களை சாகுற வரைக்கும் ஜெயில்ல போடணும்” - ரஜினிகாந்த் ஆவேசம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
rajinikanth latest speech

சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதில் மருத்துவமனை குறித்தும் தனது உடல் நலம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். 

அதன் ஒரு பகுதியாக, “25 வருஷமா நான் எந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை. ஏனென்றால், எந்த ஒரு கட்டடத்தை திறந்து வைத்தாலும் ரஜினிக்கும் அதில் பங்கு உண்டு. அந்த நிறுவனத்துடன் ரஜினிகாந்த பார்ட்னராக இருக்கிறார், அந்த நிறுவனமே ரஜினியுடைது தான் அவருடைய பினாமியில் நடத்துறாங்க என சொல்லுவாங்க. 

என் உடம்பு பல மருத்துவமனைகளிலிருந்து குணமடைஞ்சிருக்கு. அதனால் டாக்டர்கள், நர்சுகள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்களின் உதவியினால் தான் நான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஃப்ளாட்ஸ்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது, பக்கத்திலே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல்,  மளிகை கடை, மார்க்கெட் இருக்கு என்கிறார்கள். ஆனால் மருத்துவமனை இருக்கு என யாருமே விளம்பரம் செய்வதில்லை. அது எல்லாத்தை விட மருத்துவமனை தான் முக்கியம். இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைங்க மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல போடணும்” என ஆவேசமாக பேசினார்.