Skip to main content

சமந்தாதான் முதலில் விவாகரத்து முடிவை எடுத்தாரா? நாகர்ஜுனா விளக்கம்

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

nagarjuna explain samantha naga chaitanya fake news

 

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் 'மெர்சல்', 'கத்தி', 'தெறி', 'இரும்புத்திரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.

 

கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இது தொடர்பான ஒரே மாதிரியான விவாகரத்து அறிக்கையை நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.  இது திரையுலகினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. 

 

இதனைத்தொடர்ந்து, முதலில் சமந்தாதான் விவாகரத்து முடிவை எடுத்ததாகவும், அதன் பின்புதான் நாக சைதன்யா ஒப்புக்கொண்டதாகவும் பிரபல தெலுங்கு நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜுனா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாக செய்திகள் வெளியாகின. 

 

இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா இது போலியான செய்தி என விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சமந்தா மற்றும் நாக சைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் முற்றிலும் முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாக சைதன்யாவுடன் ஜோடி போடும் சாய் பல்லவி

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

sai pallavi to pair with naga chaitanya in new movie

 

நாக சைதன்யாவின் 23வது படத்தை, சந்து மொண்டேடி இயக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்குகிறார். இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார். மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை விரைவில் தயாரிப்பு குழு அறிவிக்கவுள்ளனர். 

 

 

Next Story

சமந்தாவை பார்த்து வெளியேறினேனா?- நாக சைதன்யா விளக்கம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

naga chaitanya samantha issue

 

கன்னடத்தில் நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் பிரஜ்வல், மஞ்சுநாத் நாயக்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஹாஸ்டல் ஹுடுகாரு பேககிடாரே' (Hostel Hudugaru Bekagiddare). இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 'பாய்ஸ் ஹாஸ்டல்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியானது. 

 

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு, ஹைதராபாத்தில் சிறப்பு திரையிடல் நடந்ததாகவும் அதில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. முதல் பாதி முடிந்ததும், இடைவெளியில் சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரவுள்ள குஷி படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பப்பட்டதாகவும் அதனால் நாக சைதன்யா திரையரங்கை விட்டு படம் பார்க்காமல் பாதியிலே வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் இந்த தகவல் குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு விளக்கமளித்துள்ளார் நாக சைதன்யா. அவர் கூறுகையில், "இது முற்றிலும் போலியானது. சில தெலுங்கு இணையதளங்கள் இந்த வதந்தியை ஆரம்பித்து விட்டன. அதை சரி செய்யும்படி ஏற்கனவே அவர்களிடம் சொல்லிவிட்டேன்" என்றுள்ளார். 

 

நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தற்போது பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.