Skip to main content

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் திருமணம்; திரைபிரபலங்கள் வாழ்த்து

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

music director justin prabhakaran gets married


விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இசையமைத்து வருகிறார். இவர் இசையில் வெளியான 'ஒரு நாள் கூத்து', 'டியர் காம்ரேட்', 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட சில படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இவரின் காதல் பாடல்கள் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் பாலசரவணன் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எங்கள் கூட்டத்தின் கடைசி சிங்கிள் இன்று முதல் சங்க உறுப்பினர் ஆகிறான்.. வாழ்த்துகள் நண்பா. வாழ்க வளமுடன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

‘மயிலிறகே மயிலிறகே…’ - மணக்கோலத்தில் நடிகை நிலா

Published on 13/03/2024 | Edited on 13/03/2024

 

எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நிலா. தமிழில் நிலா என்ற பெயரில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். இவருடைய உண்மையான பெயரும் மீரா சோப்ரா என்பதும் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவின் உறவினரின் தங்கை தான் மீரா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக தமிழில் பரத் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான கில்லாடி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தொழில் அதிபர் ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்பவரை மீரா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தற்போது, இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.