Skip to main content

இது கரோனா மரணம் அல்ல; மருத்துவக் கட்டமைப்பு செய்த கொலை... நடிகை மீரா சோப்ரா ட்வீட்!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

Meera Chopra

 

தன்னுடைய குடும்பத்தினர் இருவர் கரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்ததையடுத்து, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனத்தை நடிகை மீரா சோப்ரா முன்வைத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் மரணமடைந்துவிட்டனர். இது கரோனா தொற்றால் ஏற்பட்ட மரணம் அல்ல; நம்முடைய தோற்றுப்போன மருத்துவக் கட்டமைப்பினால் செய்யப்பட்ட கொலை. நம் நாட்டில் மட்டும்தான் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். நிலைமை அச்சுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகை மீரா சோப்ராவின் மறைந்த உறவினர்களில் ஒருவர், இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதும், மற்றொருவர் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணித்ததும் குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்'' - நடிகை வேதனை!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

cndfh


எஸ்.ஜே. சூர்யா படங்களான 'அன்பே ஆருயிரே' மற்றும் 'இசை' பட நாயகியான நிலா என்கிற நடிகை மீரா சோப்ரா இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடி வருகிறார். இந்த உரையாடலின் போது, "ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, எனக்கு அவர் யார் எனத் தெரியாது மற்றும் நான் அவருடைய ரசிகை அல்ல” என்று முடித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, ‘அவருடைய படங்களைப் பார்த்தால் ரசிகையாக மாறிவிடுவீர்கள்’ என்று மற்றொருவர் தெரிவிக்க அதற்கு,  ‘மிக்க நன்றி ஆனால் ஆர்வமாக இல்லை’ என்று வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார்.
 


இதனை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை திட்டி பதிவிட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து ஜூனியர் என்.டி.ஆரை டேக் செய்து, "இதுமாதிரி ரசிகர்களைச் சம்பாதித்தில் என்ன வெற்றி கண்டீர்கள்? என்னுடைய பதிவிற்குப் பதிலளிக்காமல் இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மீரா தன்னை மிரட்டும், அசிங்கமாகப் பதிவிடுபவர்களின் பதிவுகள் குறித்து ட்விட்டரில் கருது தெரிவித்துள்ளார். அதில்... 

''நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். என்னை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் வாழ்க்கையற்றவர்கள். கரோனாவால் ஒரு பெரிய நெருக்கடி உள்ள இந்தச் சமயத்தில் உலகம் முழுவதும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் உங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தின் ரசிகை அல்ல என்ற காரணத்தால் நீங்கள் துஷ்பிரயோகம் செய்வதிலும், அச்சுறுத்துவதிலும் என்னை வைத்து சிறிய மகிழ்ச்சியைப் பெறுகிறீர்கள். போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்!'' எனப் பதிவிட்டுள்ளார்.

 



 

Next Story

''அவர்களுக்கு கட்டாய கரோனா சோதனை செய்யப்பட வேண்டும்'' - எஸ்.ஜே. சூர்யா பட நாயகி அறிவுறுத்தல்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

gesge

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,84,795 என்ற அளவிலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,52,225 என்ற அளவிலும் இருக்கிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக அளவில் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது அமலில் இருக்கும் நான்காவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் உள்நாட்டு விமான சேவைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பமானது. 
 


விமானத்தில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும், கரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களோடு பயணிகள் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து எஸ்.ஜே. சூர்யா படங்களான 'அன்பே ஆருயிரே' மற்றும் 'இசை' பட நாயகியான நிலா என்கிற மீரா சோப்ரா சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''விமானத்தில் செல்லும் ஒவ்வொரு பயணிகளுக்கும் கட்டாயம் கோவிட் 19 சோதனை செய்யப்பட வேண்டும். அதிக ஆபத்து உள்ள இந்தக் காலங்களில் நீங்கள் பறக்கிறீர்கள் என்றால், மற்றவர்களை ஆபத்தில் வைக்காதபடி உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.