Skip to main content

மம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
dq

 

 

தென்னிந்திய சினிமாவின் அனைத்து சினிமா துறைகளிலும் பிரபலமானவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாள ரசிகர்களுக்கு இணையாக மற்ற மொழி பேசுபவர்களிடமும் ரசிகர்களை சம்பாதித்திருப்பவர் துல்கர். 

 

இந்தியா முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் லாக்டவுன் நடைமுறையில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாராக இருந்தாலும் வெளியே செல்லமுடியாமல் இருந்து வருகின்றனர். மேலும், இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நடிகர் மம்முட்டி எவ்வளவு காலம் என்னால் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியும் என்று சவால்விடுத்து, அதை கடைபிடித்து வருகிறார் என்று துல்கர் தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மம்முட்டி குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால் இருக்க முடியும் என்பதை பார்க்க விரும்புவதாகவும், தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக செல்ல அழைத்தபோது அவர் ஆர்வம் காட்டவில்லை. அவரைப் போல் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்றும், சலிப்பாக இருப்பதாகவும், வெளியே செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் துல்கர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” - நொறுங்கிப் போன துல்கர் சல்மான்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Dulquer Salmaan condemn about Spanish couple attack

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதியர், இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலில் பாகிஸ்தான் சென்ற அவர்கள், பின்பு பங்களாதேஷ் சென்று, நேபாள் செல்வதற்கு ஜார்க்கண்ட் வழியாக சென்றுள்ளனர். அப்போது  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து தும்கா மாவட்டத்தில் உள்ள குறுமுகத் என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அந்த தம்பதியர், இரவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்து தங்கியிருந்தனர்.

கடந்த 1ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்து, கணவரை அடித்து தாக்கிவிட்டு, அந்த இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைதளத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.  

இதையடுத்து தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் துல்கர் சல்மான், “இதைக் கேட்டு நொறுங்கிப் போனேன். நீங்கள் இருவரும் சமீபத்தில் கோட்டயத்திற்குச் சென்றிருந்தீர்கள், அங்கு நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு உணவளித்தனர். இது யாருக்கும் எங்கும் நடக்கக்கூடாது” என அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாலிவுட் நடிகை மற்றும் அரசியல் ஆர்வலரான ரிச்சா சதா, “வெட்கக்கேடானது. இந்தியர்கள் தங்கள் சொந்தப் பெண்களை நடத்துவது போல் வெளிநாட்டினரை நடத்துகிறார்கள். நமது அழுகிய சமூகத்தைப் பார்த்தால் அவமானமாக இருக்கிறது” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story

“உங்களுடைய தீவிர ரசிகன் சார்” - செல்வ ராகவன் பிரமிப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
selvaraghavan about mammootty

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரமயுகம். நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று (15.02.2024) தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது. இந்த சூழலில் மம்மூட்டி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் இருக்கும் அவரது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவின் கீழ் ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இயக்குநர் மற்றும் நடிகரான செல்வராகவன், “உங்களுடைய தீவிர ரசிகன் சார். பிரமிப்பாக உள்ளது” என கமெண்ட் செய்துள்ளார்.