Skip to main content

தனுஷின் ஜோடியான தீவிர ரசிகை...

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

malavika mohanan

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், 'வடசென்னை', 'அசுரன்', 'பட்டாஸ்' ஆகிய படங்களுக்குப் பிறகு, தற்போது 'கர்ணன்' படத்திலும், 'அத்ராங்கி ரே' என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள படம் அவரின் 43 ஆவது படமாகும்.

 

இப்படத்தை, 'துருவங்கள் பதினாறு', 'மாஃபியா' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.  

 

தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம், அறிமுகமான மாளவிகா மோகனன், இப்படத்தில் தனுஷின் ஜோடியாகிறார். இவர் ஒரு பேட்டியில் தான், தனுஷின் தீவிர ரசிகை எனவும், அவருடன் நடிக்க விரும்புவதாகவும் கூறியிருந்தார். இவர் விஜயின் ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

                               
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கவர்ச்சி எனக்குப் பிடிக்கும்” - ரசிகரின் கேள்விக்கு மாளவிகா பதில்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
malavika mohanan about his glamaour photoshoot

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 
மேலும் இந்தியில் யுத்ரா படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயராகி வருகிறது. இப்போது தெலுங்கில் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகரகளுடன் உரையாடினார். அவரக்ளின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு ரசிகர் ஏன் எப்போதும் கவர்ச்சி அட்ங்கிய போட்டோஷூட்களை நடத்துகிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மாளவிகா, “ஏனென்றால் எனக்கு கவர்சி பிடிக்கும்” என்றுள்ளார். 

இதனிடையே மாளவிகா மோகனின் கனவு கதாபாத்திரம் குறித்த கெட்கப்பட்ட கேள்விக்கு, “கேங்ஸ்டராக நடிக்க ஆசை! ஒரு பெண் கூலான கேங்க்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்; இப்போது நான் ஆக்ஷன் சீன்களுக்கு பயிற்சி பெற்றிருப்பதால், அதை பார்ப்பதற்கு
ஜாலியாக இருக்கும்” என பதிலளித்துள்ளார். 

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார்.