Skip to main content

அரசியல் தலைவரின் பயோ பிக் - படக்குழுவுடன் இணைந்த மாதவன்

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Madhavan joins Akshay Kumar C Sankaran Nair Biopic

 

தமிழ் மற்றும் இந்தியில் பல படங்களிலும், ஆங்கிலத்தில் சில படங்களிலும் நடித்துள்ள மாதவன் முதல் முறையாக 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'  படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி பலரது வரவேற்பைப் பெற்றது.

 

மேலும் சர்வதேச அரங்கில் பல பாராட்டுகளையும் பெற்றது. அதோடு தற்போது ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான 301 திரைப்படங்கள் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தப் படமும் இடம்பெற்றது. 'ராக்கெட்ரி' படத்தைத் தொடர்ந்து இந்தியில் 'தோகா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

 

இந்த நிலையில் மற்றொரு இந்திப் படத்தில் தற்போது மாதவன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட காலத்திற்குத் தலைவராக இருந்த வக்கீல் சி.சங்கரன் நாயரின் வாழ்க்கையை கரன் சிங் இயக்கி வருகிறார். இதில் சங்கரன் கதாபாத்திரத்தில் அக்சஷய் குமார் நடிக்க கதாநாயகியாக அனன்யா பாண்டே நடிக்க படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாதவன் தற்போது இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக 1920களில் இருக்கும் நீதிமன்றம் போல் செட் அமைக்கப்பட்டு அதில் மாதவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறதாம். 

 

 

சார்ந்த செய்திகள்