Skip to main content

இந்த வருட ஆஸ்கர் நாயகர்கள்! 

Published on 05/03/2018 | Edited on 05/03/2018
oscar


ஹாலிவுட்டில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சி இன்று காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்க, பல ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தி ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகளும், இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற படங்களின் விவரம் உங்கள் பார்வைக்கு......

சிறந்த படம் - தி ஷேப் ஆப் வாட்டர் 
சிறந்த நடிகர் - கேரி ஓல்டுமேன் (டார்கஸ்ட் ஹவர்)
சிறந்த நடிகை - பிரான்சஸ் மிக்டார்மண்ட் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
சிறந்த திரைக்கதை - கெட் அவுட் (ஜோர்டன் பீல்)
சிறந்த இயக்கம் - கில்லர்மோ டெல் டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)
சிறந்த ஒளிப்பதிவு - பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ.டெக்கின்ஸ்)
சிறந்த தழுவல் திரைக்கதை - கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் ஐவொரி)
சிறந்த ஆவண குறும்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405 (ப்ராங்க் ஸ்டிப்பெல்)
சிறந்த இசை - தி ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்)
சிறந்த படத்தொகுப்பு - டங்கிர்க் (லீ ஸ்மித்)
சிறந்த பாடல் - கோகோ (ரிமம்பர் மி)
சிறந்த லைவ் ஆக்‌ஷன் திரைப்படம் - தி சைலன்ட் சைல்ட் (கிறிஸ் ஓவர்டன், ராச்சல் ஷென்டன்)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - பிளேட் ரன்னர் 2049 (ஜான் நெல்சன், கெர்டு நெப்சர், பால் லாம்பர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர்.ஹுவர்)
சிறந்த துணை நடிகர் - சாம் ராக்வெல் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
சிறந்த துணை நடிகை - ஆலிசன் ஜேனே (ஐ, டொன்யா)
சிறந்த வெளிநாட்டு படம் - எ பென்டாஸ்டிக் வுமன் (சிலி)
சிறந்த அனிமேஷன் படம் - கோகோ (லீ அன்கிர்ச், டார்லா கே.ஆன்டர்சன்)
சிறந்த அனிமேஷன் குறும்படம் - டியர் பாஸ்கட்பால் (க்ளென் கீன், கோப் ப்ரயண்ட்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - தி ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த ஒலித்தொகுப்பு - டங்கிர்க் (ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன்)
சிறந்த ஒலி இணைப்பு - டங்கிர்க் (கடரெக், க்ரே, மார்க்)
சிறந்த ஆவணப்படம் - ஐகரஸ் (பிரயன் போகல், டேன் கோகன்)
சிறந்த ஆடை வடிவமைப்பு - பாண்டம் த்ரெட் (மார்க் ப்ரிட்ஜஸ்)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - டார்க்கஸ்ட் ஹவர் (கசுரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லக்கி சிபிக்) 

சார்ந்த செய்திகள்

Next Story

பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து உரையாடிய பிரதமர்!

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

pm modi  met the pomman Belli couple

 

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்த பின் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர். 

 

அதன்பிறகு மைசூர் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, இன்று காலை பந்திப்பூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிறகு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வந்தார். பின்னர் யானைகளுக்கு கரும்புகளை வழங்கி மகிழ்ந்ததோடு யானைகளின் பாகன்களை சந்தித்து உரையாடினார். பின்பு இங்கு வர முக்கியக் காரணமாக இருந்த ஆஸ்கர் விருது வென்ற "தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள பாகன்கள் பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து பாராட்டி அவர்களிடம் உரையாடிவிட்டு சாலை மார்க்கமாக தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு காரில் சென்று பின்பு அங்கிருந்து தனி விமானம் மூலம் மைசூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

 

 

Next Story

பொம்மன் பெள்ளியை நேரில் சந்திக்கும் மோடி; புதுப்பொலிவு பெரும் தெப்பக்காடு

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். குறிப்பாக சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம்-செங்கோட்டை ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைக்க இருக்கிறார்.

 

அதனைத் தொடர்ந்து 8 ஆம் தேதி முதுமலை தெப்பக்காடு பகுதிக்குச் செல்ல இருக்கிறார். இதனால் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி செல்லும் பிரதமர்  'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதோடு ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளையும் நேரில் பார்வையிட இருக்கிறார்.

 

மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9 மணிக்கு மசினகுடிக்கு வருகை தரும் பிரதமர், சாலை மார்க்கமாக தெப்பக்காடு செல்கிறார். இதனால் அந்த பகுதியில் நாளை முதல் வரும் 9 ஆம் தேதி வரை ரிசர்ட்டுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகை காரணமாக அங்கிருக்கும் அரசு அலுவலகங்கள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வன விலங்குகளை காண்பதற்கான வாகன சவாரியும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துப்புரவு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.