Skip to main content

தமிழ் சினிமாவும் கௌரவ டாக்டர் பட்டமும்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

simbu

 

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் எனத் தமிழ்த்திரையுலகில் பன்முகம் கொண்டவரான நடிகர் சிம்புவிற்கு சமீபத்தில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது வேல்ஸ் பல்கலைக்கழகம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடின உழைப்பினால் இன்று முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள சிம்புவின் திரைத்துறை பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த டாக்டர் பட்டமானது அவருக்கு வழங்கப்பட்டது. சிம்புவிற்கு முன்னதாக எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். தமிழ்த்திரையுலகில் யார் யார் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்கள், எந்தப் பல்கலைக்கழகம் அவர்களுக்கு வழங்கியது என்பதைப் பார்ப்போம்.

 

எம்.ஜி.ஆர். - 

 

தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் அசைக்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவருக்கு 1974ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அதேபோல 1987ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 

 

சிவாஜி கணேசன் -

 

1952ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய அளவில் மிகப்பெரும் நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன். இவருக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 1986ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

 

கமல்ஹாசன் -

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், இயக்குநர், பாடகர் எனப் பல தளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து உலக நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் கமல்ஹாசன். இவருக்கு கடந்த 2005ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

 

விவேக் -

 

அண்மையில் காலமான நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக்கிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

 

விஜய் -

 

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய்க்கு கடந்த 2007ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அந்தச் சமயத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகளை ஒருசேரப் பெற... தன்னுடைய பெயரை எழுதும்போது டாக்டர் பட்டத்தைக் குறிப்பிடவேண்டாம் என மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார். அதன் பிறகு, விஜய்யின் பெயர் எந்த இடத்திலும் டாக்டர் விஜய் எனக் குறிப்பிடப்படவில்லை.

 

விக்ரம் -

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரும் ரசிகர்களால் சியான் என அன்போடு அழைக்கப்படுபவருமான விக்ரமிற்கு கடந்த 2011ஆம் ஆண்டு இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
  

விஜயகாந்த் -

 

90களில் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் விஜயகாந்த், பின் தேர்தல் அரசியலில்  ஈடுபட்டு தமிழக எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியில் அமைந்துள்ள இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சர்ச் மேனேஜ்மேண்ட் அமைப்பு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.  

   

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.  

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.