Skip to main content

''ரஜினி, கமல், அஜித், விஜய் தயவுசெய்து ஹெல்ப் பண்ணுங்க'' - பிரபல நடிகை வேண்டுகோள் 

Published on 07/04/2020 | Edited on 07/04/2020


உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்தி ஐம்பது ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனா தொற்று காரணமாகத் திரைப்பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் எதுவும் நடைபெறாத நிலையில் சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கு நடிகர் நடிகைகள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.அதேபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர், நடிகைகள், நாடக நடிகர்களுக்கும் சில நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

 

hdfgd

 

இதுவரை ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம், கார்த்தி ரூ.2 லட்சம், நடிகர் சூரி ரூ.1 லட்சம், நாசர், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் தலா ரூ.50 ஆயிரம், பொன்வண்ணன், சாய்பிரதீப் ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம், சங்கீதா ரூ.15 ஆயிரம் வழங்கி உள்ளனர்.பூச்சி முருகன்,கோவை சரளா, சத்யபிரியா, ரோகிணி, லதா, சச்சு, நாகிநீடு, பிரபா ரமேஷ், சேலம் பார்த்திபன் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரமும் வழங்கி உள்ளனர்.இதுவரை ரூ.15 லட்சத்து 65 ஆயிரத்து 100 வசூலாகி உள்ளது. இந்நிலையில் பழம்பெரும் நடிகை 'குட்டி பத்மினி', ரஜினி, கமல்,அஜித், விஜய்க்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்... "நடிகர் சங்கம் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது.ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்,தயவு செய்து, உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்குச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கதறி அழுத மனோபாலா;கடைசி வரை நிறைவேறாத கனவு

Next Story

“கதறி அழுத மனோபாலா; கடைசி வரை நிறைவேறாத கனவு” - குட்டி பத்மினி பகிரும் நினைவுகள்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

Kutty Padmini Interview

 

மறைந்த இயக்குநர், நடிகர் மனோபாலா குறித்த தன்னுடைய நினைவுகளை நடிகை குட்டி பத்மினி  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

மனோபாலா அவர்களைப் பல வருடங்களாக எனக்குத் தெரியும். அவருடைய படங்களில் நான் நடித்திருக்கிறேன். மற்றவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர். அவருக்கு நண்பர்கள் தான் அதிகம். அவர் இல்லாத சினிமா சங்கமே இல்லை என்று சொல்லலாம். ஒரு வெற்றிகரமான இயக்குநராக இருந்து, அதன் பிறகு இயக்கும் வாய்ப்புகளை இழந்தாலும் நடிப்பின் மூலமாக அதை ஈடுகட்டி 500 படங்களுக்கு மேல் நடித்து வெற்றிகரமாக வலம் வந்தவர் மனோபாலா. இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்யாண மாலை நிகழ்ச்சிக்காக அவரோடு நான் கோவை பயணித்தேன். ஜாலியான அனுபவமாக இருந்தது.

 

கலை மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர். என்னுடைய சீரியலை அவர் டைரக்ட் செய்து கொடுத்திருக்கிறார். சரியான நேரத்தில் ஷூட்டிங் தொடங்கி முடித்து விடுவார். அனைத்து நடிகர்களுக்கும் அவர் நண்பர். தோட்டத்தை சுற்றி வாழ்வது எங்கள் இருவருக்கும் பிடித்த விஷயம். திருச்சியில் இருக்கும் வெக்காளியம்மன் கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்வார். இருவரும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். அவை அனைத்தும் ஆரோக்கியமான சண்டைகள் தான். 

 

அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். என்னுடைய நெருங்கிய நண்பரான அவருடைய இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. ஒரு பெரிய சரித்திரப் படம் அல்லது டிவி சீரியல் பண்ண வேண்டும் என்பது அவருடைய ஆசை. சரித்திரக் கதைகள் கொண்ட புத்தகங்களை நானும் அவரும் விடாமல் படித்து விடுவோம். கலைஞரின் எழுத்தில் நாங்கள் ரோமாபுரி பாண்டியன் சீரியல் எடுத்தபோது அதில் தனக்கு ஒரு பாத்திரம் வழங்கியிருக்க வேண்டும் என்று சண்டையிட்டார். 

 

அவரால் தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்று நினைப்பார். அவருக்கு இந்த அளவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது யாருக்கும் தெரியாது. விவேக் சாரை கொரோனா தடுப்பூசி செலுத்த அழைத்துச் சென்றது மனோபாலா தான். நானே என்னுடைய நண்பனை அழைத்துச் சென்று, அவனுடைய சாவுக்குக் காரணமாகிவிட்டேனே என்று பலமுறை அழுதிருக்கிறார். விவேக் சாரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். சினிமாவின் பல கலைகளில் ஒரே நேரத்தில் இயங்கியவர். அவருடைய மறைவு சினிமா உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்.