Skip to main content

கலைமாமணி விருது வென்ற நடிகை... கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர்!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

madhumitha

 

இயக்குநர் ராஜேஷ் இயக்கிய 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை மதுமிதா. அப்படத்தில் அவர் நடித்திருந்த ஜாங்கிரி கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மதுமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். இந்த நிலையில், தமிழக அரசு நடிகை மதுமிதாவிற்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

sakra

 

இந்நிலையில், மதுமிதா விருது பெற்றதை 'கும்பாரி' படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதுகுறித்து மதுமிதா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'நான் விருது வாங்கியதைக் கேக் வெட்டிக் கொண்டாடிய 'கும்பாரி' படக்குழுவினருக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈசிஆரில் நடந்த பரபரப்பு சம்பவம்; வீடியோ வெளியிட்ட நடிகை

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
ethir neechal serial actress madhumitha about ecr accident issue

தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 21 ஆம் தேதி அவரது ஆண் நண்பரின் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். பின்பு திரும்பி வந்தபோது காரை மதுமிதா ஓட்டி வந்தார். அப்போது ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்தது.

அதனால் வாகனத்தை திருப்பி ஒன்வே ரூட்டில் ஓட்டி வந்தார். அதே சாலையில் காவலர் ரவிகுமார், இருசக்கர வாகனத்தில் காருக்கு எதிர்ப்புறமாக வந்தார். மதுமிதா ஓட்டி வந்த கார் ரவிகுமார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரவிகுமாருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரவிகுமாரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்பு பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். பின்பு ஆர்டிஓ சோதனைக்குப் பின் காரை ஒப்படைத்தனர். அடுத்து சில மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்தனர். இந்த சம்பவத்தின் போது மது போதையில் மதுமிதா காரை ஓட்டியுள்ளதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுமிதா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “எல்லா டிவி சேனல்கள், ஆர்டிகல், யூட்யூபில் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. அதாவது, நான் மது அருந்துவிட்டு ஒரு போலீஸ்காரரை இடிச்சிருக்கேன், அந்த போலீஸ்காரர் தீவிரமாக காயம்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கு. முதலில் அது உண்மை இல்லை. நான் குடிக்கவில்லை. ஆனால் சின்ன விபத்து நடந்தது. அதில் அந்த போலீஸ்காரர் இப்போ நல்லாத்தான் இருக்காங்க. நானும் நல்லாதான் இருக்கேன்” என்று விளக்கமளித்துள்ளார். 

Next Story

“ஹிந்தி, தெலுங்கு திரைத்துறைகளில் இப்படி இல்லை ஆனால் தமிழ் துறையில்...”- பிக்பாஸ் மதுமிதா வேண்டுகோள்

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

ஞானச்செருக்கு... உலகத்திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரையுலகின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படம். மறைந்த ஓவியர் வீரசந்தானம், முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், இயக்குனர் கௌதமன், பிக்பாஸ் மதுமிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

madhumitha

 

 

அப்போது பேசிய பிக்பாஸ் மதுமிதா, “ஞானச்செறுக்கு படத்தின் முன்னோட்டத்திற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. சந்தானம் ஐயாவை நேரில் பார்க்கின்ற பாக்கியம் கூட எனக்கு கிடைக்கவில்லை என நினைக்கும்போது மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகிறேன். இதுபோன்ற சிறிய தொகையில் எடுக்கப்பட்ட படங்கள் பல நூறு படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், ஹை பட்ஜெட்டில் எடுக்கும் படங்களை தவிர்த்து, ஸ்மால் பட்ஜெட்டில் எடுக்கும் நிறைய படங்கள் மிகுந்த தரம் வாய்ந்த படங்களாக இருக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நெடுநல்வாடை, ஒத்தச்செருப்பு, சில்லுக்கருப்பட்டி இப்படி தரமாக எடுக்கின்ற படங்களுக்கு தேவையான திரையரங்குகள் கிடைப்பதில்லை. அதேபோல இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் அடுத்து படம் எடுக்கும் அளவிற்கு நிறைய வசூல் செய்து லாபம் அடைவதும் கிடையாது. இதற்கு என்ன காரணம் என்பதை கட்டாயமாக தமிழக அரசும், தயாரிப்பாளர் சங்கமும் ஆராய்ந்து அதை நிறைவேற்ற வேண்டும். 

ஹிந்தியாக இருக்கட்டும் தெலுங்காக இருக்கட்டும் அங்கு லோ பட்ஜெட், ஹை பட்ஜெட் என்கிற வித்தியாசமே கிடையாது. படத்தின் கதைக்களம் தரமாக இருந்தால் அது சூப்பர் டூப்பர் ஹிட்தான். ஆனால், தமிழகத்தில் வெளியாகும் தரமான படங்களை எப்படி மக்களுக்கு எடுத்து செல்கிறோம். அவர்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் அது மக்களுக்கு செல்லாமல், நிறைய பேர் அதை பார்க்கமுடியாமல் போகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பில் எனக்கு நிறைய கடன் இருக்கிறது என்று தெரிவித்த தயாரிப்பாளர் அடுத்த செய்தியாளர் சந்திப்பில் நான் நிறைய படங்கள் இயக்கப்போகிறேன், தயாரிக்க போகிறேன் என்று சொல்ல வேண்டும். இந்த ஞானச்செருக்கு படத்தின் மூலமாக எனக்கு லாபம் கிடைத்தது என்று வியாபார ரீதியாக இந்த டீம் வெற்றியடைய வேண்டும்” என்றார்.