Skip to main content

தள்ளிப்போகும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ரிலீஸ்?

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

kgf chapter 2

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

 

'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் ஜுலை 16ஆம் தேதி வெளியாகும் எனக் கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் அறிவித்த படக்குழு, அதற்கேற்ப இறுதிக்கட்டப் பணிகள், பட வியாபாரம் உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்திவந்தது. தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்வதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்புநிலை திரும்பிய பிறகே, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைத் திட்டமிட்டபடி நிறைவு செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

சார்ந்த செய்திகள்