Skip to main content

தி கேரளா ஸ்டோரி பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

The Kerala Story director Sudipto Sen hospitalised

 

ஆஸ்மா (2018) மற்றும் தி லாஸ்ட் மாங்க் (2006) மற்றும் தி கேரளா ஸ்டோரி (2023) உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுதிப்தோ சென். சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இருப்பினும் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தற்போது ரூ.200 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்நிலையில் இயக்குநர் சுதிப்தோ சென் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருக்கும் இவர் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்போது நலமாக இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகவுள்ளதாகவும் பேசப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Ajith Kumar at Hospital

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த சில தினங்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம்  அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. கடந்த 2 ஆம் தேதி அஜித் அவரது மகன் ஆத்விக் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். 

இந்த நிலையில், அஜித் குமார்  சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித பட இயக்குநர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
pa.ranjith movie j.baby director suresh maari emotional at press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய நாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.