Skip to main content

49 ஆண்டுகால பழமையான பட ரீமேக்கின் படப்பிடிப்பை நிறைவுசெய்த மிர்ச்சி சிவா படக்குழு!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Kasethan Kadavulada

 

கடந்த 1972ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘காசேதான் கடவுளடா’ என்ற படம், தற்போது சமகாலத்திற்கு ஏற்ப ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இப்படத்தை ஆர். கண்ணன் தயாரித்து இயக்குகிறார். அவருடன் எம்.கே.ஆர்.பி. நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் ஊர்வசி, கருணாகரன், ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி மற்றும் புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். என். கண்ணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கிய படக்குழு, ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடத்தி 35 நாட்களிலேயே மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது.

 

படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆர். கண்ணன் இப்படம் குறித்து கூறுகையில், "எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன். ஆனால் ‘காசேதான் கடவுளடா’ முற்றிலும் வேறானது. அனைவரும் முடங்கியிருந்த பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். இவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன் உள்ளிட்ட நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும்தான் காரணம். அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்தான் இது சாத்தியமானது. விரைவில் படத்தின்  விஷுவல் ப்ரோமோவுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் திரை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரைவில் வெளியிடவுள்ளோம்” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இந்த காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது" - பிரியா ஆனந்த்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Priya Anand about Turkey, Syria earthquake

 

துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவு, 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவு, 4வது முறையாக 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

 

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 5,000 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

 

இந்த நிலநடுக்கம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இந்த நிலைமை சரியாகவும் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரைப்பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், நடிகை ப்ரியா ஆனந்த், "துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து வெளியாகியுள்ள காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

நடிகை மிருனாள் தாக்கூர், "இது மிகவும் மனவேதனை அளிக்கிறது. கடவுளே, தயவு செய்து கருணை காட்டுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். நடிகை ஆத்மிகாவும் சிரியா மற்றும் துருக்கி மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாகப் பதிவிட்டிருந்தார். 

 

பாடலாசிரியர் வைரமுத்து, "துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும். கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் பல பிரபலங்களும் தங்களது பிரார்த்தனைகளை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Next Story

'தளபதி 67' அப்டேட் - கமிட்டான பிரபல ஹீரோயின்.. ஆனா ஹீரோயின் இல்ல...

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

thalapathy 67 update priya anand and sandy master on board

 

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்.

 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.

 

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு தெரிவித்த நிலையில் தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக அறிவித்த படக்குழு, அடுத்ததாக ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரபல ஹீரோயினாக வலம் வரும் இவர் இப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் அல்லாமல் முக்கிய கதாபாத்திரம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் இப்படத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படத்தில் திரிஷா கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், அதனைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது தனி விமானம் மூலம் அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறது.