Skip to main content

"இது எனது கனவு படம்" - கார்த்திக் சுப்புராஜ் சிலிர்ப்பு!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

vggsdgs

 

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ‘ஜகமே தந்திரம்’ படம் ஜூன் 18 (இன்று) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை ஒட்டி நடிகர்களும் படக்குழுவினரும், இணையம் வழியே பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படம் குறித்து பேசும்போது...

 

"என்னுடைய திரைப்பயணத்தில் எனக்கு மிகவும் முக்கியமான படம் ‘ஜகமே தந்திரம்’. இது எனது கனவுப் படம். இப்படத்தின் மையத்தை 2014லேயே உருவாக்கிவிட்டேன். ஆனால் 2018இல்தான் படம் உருவானது. படத்தின் கதை உலகம் முழுக்க நடப்பதாக இருப்பதால், உலகின் பல முனைகளிலிருந்தும் திறமையாளர்கள் பலர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார்கள். அனைவரும் மிகவும் கடுமையான உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். பல தடைகள் கடந்து படம் இப்போது திரைக்கு வருவது மகிழ்ச்சி. இப்படத்தின் இசை மிகவும் ஸ்பெஷலானது. எனது இயக்கத்தில் 'பேட்ட'  படம் தவிர எனது அனைத்து படங்களிலும் இசை சந்தோஷ் நாராயணன்தான். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே அவர் உடன் இருந்திருக்கிறார். 

 

இப்படத்திற்காக  நிறைய புதுவிதமான  ஒலிகளை உருவாக்கியிருக்கிறார். அவரின் பாடல்கள்தான் படத்திற்கு பெரிய விளம்பரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவரது இசை படத்தின் தன்மையை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்படத்தில் ஹாலிவுட்டைச் சேர்ந்த பலர் பணியாற்றியுள்ளார்கள். படத்தின் கதை நியூயார்க்கில் நடப்பதால், அங்கு நடிப்பதற்கு, ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் ஒருவரைத் தேடினோம். ஜேம்ஸ் காஸ்மோ அங்கு மிகவும் பிரபலமானவர். அவருக்குத் திரைக்கதை அனுப்பினோம். அவருக்கும் பிடித்திருந்தது. அவருடன் வேலை பார்த்தபோது மிக எளிமையாக பழகினார். 

 

ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தனுஷ்தான் இப்படத்தின் மிக முக்கியமான தூண். அவரிடம் கதை சொன்னதிலிருந்தே இந்தக் கதையைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்தப் படம் உருவானதற்கும், இப்போது படம் வெளிவருவதுவரை அவரது பங்கு மிகப்பெரியது. படத்தில் சுருளியாக கலக்கியிருக்கிறார். அவரின் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதிலிருந்து, இந்தப் படத்திற்கு கிடைத்துவரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் 195 நாடுகளில், 17 மொழிகளில், பிரமாண்டமாக வெளியாவது பெரும் மகிழ்ச்சி. படத்திற்கும் பெரிய ஆதரவு தாருங்கள். அனைவரும் படத்தைக் கண்டு களியுங்கள். நன்றி" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத நல்லிணக்கம்; உண்மைச் சம்பவம்” - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
karthik subburaj praised aishwarya rajinikanth lal salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டின் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று (09.02.2024) இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” எனக் குறிப்பிட்டு ரஜினி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கு முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் படத்தை வரவேற்றனர். மேலும் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். 

இப்படத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜ் பாராடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தலைவர் ரஜினிகாந்தை மொய்தீன் பாய்யாக பார்ப்பது சூப்பராக இருந்தது. நம்மிடையே மத நல்லிணக்கத்தின் அவசியத்தை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படக்குழு சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” எனk குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“விஜயகாந்தின் அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்” - கார்த்திக் சுப்புராஜ்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
karthik subburaj about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் படம் எடுப்பதற்கு முன்னாடி குறும்படம் எடுத்திட்டிருந்த டைம், அவருடைய டிவியில் ஒரு குறும்பட போட்டிக்காக அனுப்பியிருந்தேன். அப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு கண்டிப்பா நீ படம் பண்ணிடுவப்பா... என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதன் பிறகு அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. மதுரையிலிருந்து வந்து இவ்ளோ பெரிய லெஜண்டா வந்திருக்காரு. அவருடைய இழப்பு சினிமா துறைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு” என்றார்.