Skip to main content

கரோனா பாதிப்பு: கார்த்திக் சுப்புராஜ் நிதியுதவி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
 

karthick

 

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,23,328 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,991 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1024 லிருந்து 1071 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1022 இந்தியர்கள், 49 வெளிநாட்டினர் என மொத்தம் 1071 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 29 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 100 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் பிட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் கரோனாவை தடுப்பதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கியுள்ளார். முன்னதாக தினக்கூலியை நம்பியிருந்த ஃபெப்சி தொழிலாளர்களுக்கு திரை பிரபலங்களால் நிதி வழங்கப்பட்டது. அதில் தொழிலாளர்களுக்காக ஒரு லட்சம் நிதி வழங்கினார். 

தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்