Skip to main content

அரிசி வகைகளைப் பாதுகாக்க நடிகர் கார்த்தி நன்கொடை!  

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

hreheh

 

கொல்கத்தாவில் உள்ள முனைவர் 'தேபால் தேப்’ இன் 'பசுதா' ஆய்வகம் இந்தியாவின் 1,500க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 

முனைவர் தேபால் தேப், ஒடிசாவின் பசுதாவில் உள்ள தனது பண்ணையில் வளர்த்துப் பாதுகாக்கும் இந்த ‘மறந்துபோன’ அரிசி வகைகள் பாரம்பரிய விவசாய அறிவின் இழந்த மரபைக் காட்டுகின்றது. இந்த ஆய்வகம் பாரம்பரிய அரிசியின் மரபணு பன்முகத்தன்மை மற்றும் அவற்றின் ஊட்டச்சத்துப் பண்புகள் குறித்து, உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூறு பகுப்பாய்வு மூலம் ஆராய்ச்சி செய்கின்றது. கல்வி இதழ்களில் சக மதிப்பாய்வு (peer review) செய்யப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதும், கிராமவாசிகள் மற்றும் விவசாயிகளுடன் ஈடுபடுவதன் மூலமாகவும் பாரம்பரிய அறிவு பரிமாற்றத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது இந்த ஆய்வகம்.

 

reherh

 

பாரம்பரிய அரிசி வகைகள் சுவை, நறுமணம் போன்ற பல அம்சங்களில் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றன. மேலும் அவை பூச்சி, வறட்சி மற்றும் வெள்ளத்தை எதிர்க்கின்றன. நாம் உட்கொள்ளும் அரிசி வகைகள், ஒரே மாதிரியாக மாறி வருவதால், பாரம்பரிய அரிசி வகைகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படுகின்ற ஆராய்ச்சி இன்னும் முக்கியமாகத் திகழ்கின்றது. தற்போதைய கோவிட் -19 நெருக்கடி காரணமாக, ஆய்வகத்தை இயக்குவதற்கான நிதி குறைந்துவிட்டது. மேலும், ஆய்வகம் மூடப்படும் விளிம்பில் இருந்தது. நடிகர் கார்த்தி, 'உழவன் அறக்கட்டளை'யுடன் இணைந்து, ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் இயங்குவதற்குத் தேவையான பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார். 'மிலாப்' ஆன்லைன் தளம் மூலம் நிதி திரட்டலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

மீண்டும் பயணத்திற்கு அழைத்துப் போகும் கார்த்தி

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இப்படத்தின் வெற்றி கார்த்தி மற்றும் தமன்னாவின் சினிமா கரியரில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேலும் இருவரின் காம்போ வெற்றி கூட்டணி என பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க லிங்குசாமி கடந்த ஆண்டு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியானது. மேலும் ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை என அவரது தந்தை மற்றும் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார். பின்பு பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்டது. தொடர்ந்து ஹீரோவாக அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது.  

karthi tamanna starring lingusamy direction paiya re rlease update

இப்படி பையா 2 படம் பற்றி தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில் அண்மைக் காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு பையா பட ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், ஹிட்டடித்த நிறைய பழைய படங்கள் ரீ ரிலிஸாகி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது பையாவும் இணைந்துள்ளது.

இப்படம் வெளியான சமயத்தில் பயணத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்தது ரசிக்கும்படியாக அமைந்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்தப் பயணத்திற்கு தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.