Skip to main content

"உங்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடியது ஒன்று தான்" - கடுப்பான கங்கனா

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

 kangana reacts about she acting with vijay sethupathi

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

 

ad

 

இதனிடையே முன்னாள் விமானப்படை விமானியாக 'தேஜஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்கள் அல்லது தமிழில் பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிப்பில் தமிழில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதில் மாதவன் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது அடுத்த பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் பிரபலமாக இருக்கும் இரண்டு பிரபலங்கள் இணைவதாக தெரிவித்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருப்பது தெளிவாக இல்லாமல் மறைமுகமாக இருப்பது போல் அமைந்திருந்தது. இதை பார்த்த பலரும் ஹீரோவாக விஜய் சேதுபதியும் ஹீரோயினாக கங்கானாவும் நடிக்கிறார்கள் என பதிவிட்டு வந்தனர். இதே போல் செய்திகளும் வெளியானது. 

 

இந்நிலையில் இந்த செய்திகளுக்கு கங்கனா பதிலளித்துள்ளார். அந்த செய்திகளை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்து, "எல்லா நேரங்களிலும் என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, இது போன்ற பயங்கரமான தலைப்புச் செய்திகளுடன், என்னையும் எனது சக நடிகரையும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகள் வெளியாகி வைரலாகும். உங்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடியது ஒன்று தான்" என குறிப்பிட்டு உங்களுக்கான சிறை எங்கே உள்ளது என்ற அர்த்தத்தில் இந்தியில் ஒரு வரி குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், "அதெப்படி எல்லா செய்திகளிலும் ஒரே தலைப்பு இருக்கிறது. இந்த பதிவு உங்களை கஷ்டப்படுத்தியிருந்தால், உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

 

விஜய் சேதுபதி, தமிழைத் தாண்டி தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் 'மும்பைக்கார்' படம் கடந்த மாதம் வெளியானது. மேலும் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ள ஜவான் படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதியும் கத்ரீனா கைஃப்-க்கு ஜோடியாக நடித்துள்ள ‘மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.