Skip to main content

"அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தால் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும்" - கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
ngdd

 

கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். தற்போது இவரது மரணம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. சுஷாந்தின் காதலி ரியா மீது தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை ரியா மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நார்காட்டிக்ஸ் பீரோவுக்கு உதவ மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ட்வீட் செய்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். அதில்...

 

''பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன்தான். கிட்டத்தட்ட எல்லா ஹவுஸ் பார்ட்டிகளிலும் அது தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. அது விலையுயர்ந்த போதைப்பொருள்தான். ஆனால், பெரிய நடிகர்களின் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளுக்குச் சென்றால் தொடக்கத்தில் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். எம்.டி.எம்.ஏ படிகங்கள் தண்ணீரில் கலக்கப்பட்டு, சில நேரம் உங்களுக்குத் தெரியாமலே உங்களுக்குள் செலுத்தப்படும். போதைப்பொருள் தடுப்பு போலீஸாருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். ஆனால், எனக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும். இதனால், என் தொழிலுக்கு மட்டுமல்ல என் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம். சுஷாந்துக்கு சில கோர உண்மைகள் தெரிந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார்.

 

மேலும், போதைப்பொருள் தடுப்பு போலீஸார் பாலிவுட்டுக்குள் நுழைந்தால் பெரும் பிரபலங்கள் பலர் சிறைக்குச் செல்வார்கள். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும். பாலிவுட் என்ற சாக்கடையைத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி சுத்தம் செய்வார் என்று நம்புகிறேன். நான் மைனர் பெண்ணாக இருந்தபோது என்னுடைய வழிகாட்டியாக இருந்த ஒருவர் என்னுடைய குளிர்பானங்களில் போதைப் பொருளை எனக்குத் தெரியாமல் கலந்து கொடுத்துவிடுவார். ஆனால், நான் பிரபலமானதும் பெரிய படங்களின் பார்ட்டிகளுக்குச் சென்றபோது அங்கு ஒரு போதைப்பொருள் மற்றும் மாஃபியா உலகம் இயங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்'' என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்கனா புகைப்பட சர்ச்சை - காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகத் தேசிய மகளிர் ஆணையம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
NCW demands action from Election Commission against Congress regards kangana photo issue

நடிகை கங்கனா ரணாவத் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கங்கனா ரணாவத்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பகிரப்பட்டது.

இது சர்ச்சையான நிலையில் பதிவு குறித்து பேசிய கங்கனா, “கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீனேட், அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பலர் பயன்படுத்துவதாகவும், அதில் யாரோ ஒருவர் இந்த பதிவை வெளியிட்டுவிட்டதாகவும், தற்போது அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேபோல் கிசான் காங்கிரஸின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எச்.எஸ். ஆஹிர், கங்கனாவிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சுப்ரியா ஸ்ரீனேட் மற்றும் எச்.எஸ். ஆஹிர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அவர்களின் செயலைக் கண்டித்துள்ளது.

Next Story

“நடிகை என்பதில் நம்பிக்கை இல்லை” - கங்கனா ரணாவத்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
kangana ranaut speech about election

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. பிரச்சாரத்தையும் தீவிரப் படுத்தியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று பா.ஜ.க கட்சி நிர்வாகிகளுடன் ஹோலி பண்டிகை கொண்டாடினார். பின்பு பேட்டியளித்த அவர், “இமாச்சலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஆகியோரும் எனக்கு நிறைய ஆதரவளித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியால் தான் இன்று நமக்கு இந்த பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. 

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இமாச்சல் மற்றும் மண்டி மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன். நான் அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்களுடன் சேர்ந்து நடப்பேன், வெற்றி பெறுவேன். அதற்கு நாங்கள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வோம். உலகில் அதிகம் விரும்பப்படும் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்தான் எங்களின் நிகழ்ச்சி நிரல். எங்களது பெயராலும், உழைப்பாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நான் நம்பவில்லை, ஆனால் பிரதமர் மோடி செய்த பணியால் தேர்தலில் வெற்றி பெறுவோம். 

கட்சி வெற்றிபெற்றால், நானும் வெற்றிபெறுவேன். பிரதமர் மோடி இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நாங்களும்  வெற்றிபெறுவோம். நான் ஒரு சூப்பர் ஸ்டார் அல்லது நடிகை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அவற்றையெல்லாம் விட்டுவிட்டேன். நான் கட்சியின் உத்தரவை பின்பற்றக்கூடிய ஒரு சாதாரண தொண்டர்” என்றார்.