Skip to main content

நாகேஷை விளையாடவிட்டு நின்று ரசித்த சிவாஜி! - கமல்ஹாசன் சொன்ன கதை

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாரம் கொண்டான்'. விக்ரம், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை 19 வெளிவர இருக்கும் இந்தத் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டீசர் வெளியிடப்பட்ட இந்த விழாவில், தயாரிப்பாளர் கமல்ஹாசன் மேடையில் பேசினார். அப்போது விக்ரம் குறித்தும் படக்குழுவின் பிற உறுப்பினர்கள் குறித்தும் பேசும்பொழுது அனந்து, சிவாஜி கணேசன் உள்ளிட்ட மறைந்த திரைக்கலைஞர்கள் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சின் ஒரு பகுதி...

 

kamalhassan



"ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தொடங்கப்பட்டது, நான் பயணிக்கும் ஊபர் காராக அல்ல. என்னைத் தாண்டியும் நல்ல படங்களை அது உருவாக்க வேண்டுமென்பதற்காக. முதலில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் என்று தொடங்கப்பட்டு பிறகு எனது குருநாதர் அனந்து அவர்களால் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல்' என்று ஆனது. அந்த 'இண்டெர்நேஷனல்' என்ற வார்த்தையை சேர்த்தது அவர்தான். பாலச்சந்தர் அவர்கள் பற்றி நான் சொன்ன அளவுக்கு அனந்து குறித்து நான் சொன்னது கிடையாது. யார் என்று கேட்பார்கள். அவரது குணாதசியமே அவரை யார் என்று கேட்க வைத்ததுதான். பல பெரிய நடிகர்களுக்கு உதவியிருக்கிறார். எங்களுக்கு அவர் எப்படி உதவினாரோ, அப்படி பலருக்கு உதவத்தான் ராஜ்கமல் நிறுவனம்."

  thiruvilayadal



தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்தும் குறிப்பிட்டார். "படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும், சிறு பாத்திரம் என்றாலும் கூட, 'யார்யா இது' என்று கேட்கவைக்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் படத்தின் ஆயுள் காலம் கூடும். ஒரு நல்ல நடிகர் என்பவர் 'கபடி கபடி' என்று உடன் நடிப்பவர்களின் காலை வாருபவராக இல்லாமல், தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். நான் நல்ல நடிகன், என்னுடன் நடிப்பவர்களும் நல்ல நடிகர்கள் என்று பதற்றமில்லாமல் இருக்க வேண்டும். சிவாஜி சார் அப்படித்தான். வெளியே என்னென்னமோ கதையெல்லாம் சொல்வார்கள், 'சிவாஜி சார் நடிக்க விடமாட்டார். மத்தவங்களையெல்லாம் அமுக்கிடுவாரு'ன்னுலாம் சொல்வாங்க. அதெல்லாம் இல்லை. பேருதாரணம் நாகேஷ். திருவிளையாடல் படத்தில் நாகேஷை விளையாட விட்டுட்டு நின்னு அதை ரசிப்பார். அப்படி கம்பீரமாக இருக்க வேண்டும்".      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் படத்தில் எஸ்.ஜே சூர்யா

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
sj suryah in in vikram chiyaan 62

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் தற்போது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நீண்ட இழுபறிக்கு பின் இம்மாதம் வெளியாகும் என கெளதம் மேனன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. 

இதனை தொடர்ந்து தனது 62வது படத்திற்காக சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

‘நாங்கள் உங்களை இழந்துவிட்டோம் கேப்டன்’ - விக்ரம் இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Actor Vikram condoles the demise of Vijayakanth

தேமுதிக நிருவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்(71) கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு சிகிச்சை முடிந்து குணமடைந்து கடந்த 11 ஆம் தேதி வீடுதிரும்பிய நிலையில் நேற்று மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நேற்று மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலை சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது வீட்டை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். 

இதனிடையே விஜயகாந்த்தின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகினறனர். அந்த வகையில், நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதரான விஜயகாந்த் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை இழந்துவிட்டோம் கேப்டன்” என்று வருத்தமுடன் பதிவு செய்துள்ளார்.