Skip to main content

விருது குழுவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்திய ஜஸ்டீன் பீபர்...

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

justin

 


அமெரிக்க இசைத்துறையில் மிக உயரிய விருதுகளில் ஒன்று 'கிராமி விருது'. 61 வருடங்களாக நடைபெற்று வரும் விருது விழாவில், இந்த வருட விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் அண்மையில் வெளியானது.


 
உலகளவில் பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டீன் பீபரின் நான்கு ஆல்பங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில், இந்தப் பட்டியல் வெளியான சில மணி நேரங்களில், ஜஸ்டின் பீபர் விழாக் குழுவினருக்குக் கடிதம் ஒன்றை எழுதி, அதைத் தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

 

அதில், “என்னுடைய திறமையைக் கண்டுணர்ந்து பரிந்துரை செய்தமைக்கு நான் தலைவணங்குகிறேன். நான் என்னுடைய இசை குறித்து மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில் ஒரு 'ரிதம்ஸ்' அண்ட் 'ப்ளூஸ்' வகை ஆல்பம் ஒன்றை உருவாக்கினேன். என்னுடைய ‘சேஞ்சஸ்’ ஆல்பம் 'ஆர்' அண்ட் 'பி' வகையைச் சேர்ந்தது. ஆனால் அது 'பாப்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது எனக்கு விநோதமாக உள்ளது.

 

நிச்சயமாக எனக்கு பாப் இசை மிகவும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இதை நான் அதற்காக உருவாக்கவில்லை. எனினும் என்னுடைய இசை மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றியுடையவனாக இருப்பேன். கிராமி விருதுக்கு என் பாடல்களை பரிந்துரை செய்திருப்பதை கவுரவமாகவும் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த சாதனை உங்களின் கடின உழைப்பிற்கான சான்று” - பிரதமர் வாழ்த்து

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
pm modi congratulates shankar mahadevan team wins grammy award

உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக நடைபெற்று வரும் 'கிராமி விருது', இசையுலகில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த விருது விழா, இந்த ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. இந்த 66வது கிராமிய விருது விழாவில், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உலகின் சிறந்த ஆல்பம் (Best Global Music Album) பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளது. அக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ ஆல்பத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள நிலையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இதில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த அகையில் ஏ.ஆர் ரஹ்மான், அந்த இசைக்குழுவிற்கு எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் பிரதமர் மோடி சக்தி இசைக்குழுவிற்கு பாராட்டு கூறியுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்த அவர், “இசையின் மீதான உங்களின் சிறப்பான திறமையும் அர்ப்பணிப்பும் உலக அளவில் அன்பை பெற்றுள்ளது. இந்தியா பெருமை கொள்கிறது. இந்த சாதனைகள் நீங்கள் உழைக்கும் கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும். இது புதிய தலைமுறை கலைஞர்களை பெரிய கனவு காணவும் இசையில் சிறந்து விளங்கவும் தூண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கிராமி விருது வென்ற சங்கர் மகாதேவன் ஆல்பம்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Shankar Mahadevan shakthi This Moment album wins grammy award 2024

உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 'கிராமி விருது' இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. இந்த 66வது சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உலகின் சிறந்த ஆல்பம் (Best Global Music Album) பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ ஆல்பத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள நிலையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இதில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர். 

கடந்த வருடம் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், 'டிவைன் டைட்ஸ்' ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பம் (Best Immersive Audio Album) என்ற பிரிவில் கிராமி விருது வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.