Skip to main content

'த்ரிஷ்யம் 3' உருவாகுமா? ஜீத்து ஜோசப் பதில்!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

jeethu joseph

 

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

 

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு திட்டமிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 'த்ரிஷ்யம் 2' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய ஜீத்து ஜோசப், மிகக் குறுகிய காலத்திலேயே படத்தின் பணிகளை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, 'த்ரிஷ்யம் 2' படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 'த்ரிஷ்யம் 3' உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வந்த நிலையில், முதல்முறையாக இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில், "‘த்ரிஷ்யம்’ எடுத்து முடிக்கும்போது ‘த்ரிஷ்யம் 2’ உருவாகும் என நினைக்கவில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியபோது, இரண்டாம் பாகத்துக்கான கதை சாத்தியமானது. அதுபோல, ‘த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகம் குறித்து என்னால் தற்போது வாக்குறுதி தர இயலாது. நல்ல கதை அமைந்தால் நிச்சயம் மூன்றாம் பாகம் எடுப்பேன். கண்டிப்பாக லாப நோக்கத்திற்காக அந்த முயற்சியில் இறங்கமாட்டேன். மூன்றாம் பாகத்திற்கான கிளைமாக்ஸ் காட்சியை இப்போதே யோசித்துவிட்டேன். அதை மோகன்லாலிடம் சொன்னபோது அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் அந்த கிளைமாக்ஸ் வைக்க வேண்டுமானால் அதற்கான சிறப்பான கதையை உருவாக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்வேன். சரியாக வரவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுவேன்'' எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் கூட்டணியில் உருவாகும் புதிய படம்?

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

12th Man

 

ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இக்கூட்டணியில் உருவான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்க, இரண்டாம் பாகத்தையும் தற்போது தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

 

இந்த நிலையில், இவ்வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக '12th Man' படத்திற்காக இணைந்தது. த்ரிஷ்யம் படங்களின் தொடர்ச்சியாக இல்லாமல் மாறுபட்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளதாகக் கடந்த ஜூலை மாதம் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு 48 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. தற்போது இப்படத்திற்கான இறுதிக்கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.

 

இந்த நிலையில், '12th Man' படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '12th Man' படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப் படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், இது தொடர்பான அறிவிப்பை உரிய நேரத்தில் படக்குழு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

 

 

 

Next Story

மோகன்லாலுடன் மீண்டும் கைகோர்க்கும் ‘த்ரிஷ்யம்’ பட இயக்குநர்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

mohanlal

 

ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அப்படத்தைத் தொடர்ந்து, மோகன்லால் - ஜீத்து ஜோசஃப் கூட்டணி 'ராம்' படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருந்தன. கரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி படத்தின் பணிகளைத் தொடர்வதில் சிக்கல் எழுந்ததால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

 

அதன் பிறகு, ஜீத்து ஜோசஃப் - மோகன்லால் கூட்டணி ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்தது. மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இப்படம் சில மாதங்களுக்கு முன் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகமும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 

 

இந்த நிலையில், மோகன்லால் - ஜீத்து ஜோசஃப் கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘த்ரிஷ்யம்’ படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிய த்ரில்லர் வகை படமாக இப்படம் உருவாகவுள்ளது. '12th Man' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ள படக்குழு, நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகளைத் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.