Skip to main content

ஜீவஜோதியின் 18 வருட போராட்டம்; கையில் எடுத்த 'ஜெய் பீம்' இயக்குநர்

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

jai bhim director gnanavel next is dosa king

 

'கூட்டத்தில் ஒருவன்', 'ஜெய் பீம்' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஞானவேல். குறிப்பாக உண்மை சம்பவத்தை தழுவி சூர்யாவை வைத்து ஞானவேல் இயக்கிய 'ஜெய் பீம்' படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார் ஞானவேல். 

 

இந்நிலையில் ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான 'ஜங்க்லீ பிக்சர்ஸ்' இந்தியில் தயாரிக்கவுள்ள புது படத்தை 'தோசை கிங்' என்ற தலைப்பில் ஞானவேல் இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் இந்தியில் ஞானவேல் அறிமுகமாகவுள்ளார். இப்படம் பிரபல உணவு நிறுவனத்தின் நிறுவனர் ராஜகோபால் மீது அதிர்ச்சியூட்டும் குற்றங்களை சுமத்தி 18 வருட போராட்டத்திற்கு பிறகு அவருக்கு தண்டனை பெற்று தந்த ஜீவஜோதி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 'ஜங்க்லீ பிக்சர்ஸ்' நிறுவனம் இதற்கான உரிமையை கைப்பற்றியிருந்தது.        

 

ராஜகோபால், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றார். மேலும் அந்த தண்டனை காலத்திலே ராஜகோபால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘குறி வச்சா இரை விழணும்...’ - வேட்டையனாக வரும் ரஜினி

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
thalaivar 170 title released

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில், ரஜினி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரில் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். ‘குறி வச்சா இரை விழணும்...’ என ரஜினி பேசும் வசனம் ரசிக்க வைக்கிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

பிறந்தநாளில் அப்டேட் - ‘ரஜினி 170’ படக்குழு அறிவிப்பு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
rajini 170 title update

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. ரஜினியின் பிறந்தநாள் நாளை வரும் நிலையில், அதை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு தலைப்புடன் சேர்த்து படக்குழு சார்பில் ரஜினியின் பிறந்தநாள் டீசர் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.