Skip to main content

"எட்டு அடி நீளமுள்ள பாம்பிடமிருந்து தப்பித்த வெற்றிமாறன்" - ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பகிரும் ‘விடுதலை’ பட அனுபவம்!

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

 Indian cinematographer R. Velraj Interview

 

ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர் வேல்ராஜ், சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் குறித்து தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

விடுதலை படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க வெற்றிமாறன் தான் காரணம். மக்களுக்கான ஒரு கதையை கமர்ஷியலாகக் கொடுப்பதில் அவர் வல்லவர். அவருக்கு என்ன தேவை என்பதில் அவர் தெளிவாக இருப்பார். அவர் நினைப்பதை நம்மிடமிருந்து வாங்கி விடுவார். ஒளிப்பதிவு குறித்த ஞானமும் அவருக்கு உண்டு. விடுதலை படத்தில் 80-களுக்கான காட்சிகளை பார்த்துப் பார்த்து உருவாக்கினோம். ஓப்பனிங் காட்சியை பல்வேறு சவால்களைச் சந்தித்து தான் எடுத்தோம். 

 

இந்தப் படத்துக்காக வெளிநாட்டிலிருந்து கேமராவையும், கேமரா ஆப்ரேட்டிங் மேன் கூடப் பயன்படுத்தினோம். கிளைமேக்ஸ்க்கு முன்பு வரும் காட்சியில் சூரியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் மிரண்டு விட்டோம். அப்படியான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது வெற்றிமாறன் தான். தன்னுடைய படங்கள் குறித்து வெற்றிமாறன் தான் முதலில் கமெண்ட் அடிப்பார். எது எடுபடும், எது எடுபடாது என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் கமர்ஷியல் வெற்றிக்காக சில சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் அது முழுமையான சமரசமாக இருக்காது.

 

படம் சரியாக வருவதற்காகத் தூங்காமல் வேலை செய்வார் வெற்றிமாறன். கடுமையான உழைப்பாளி. நாங்கள் படம் பிடித்த காட்டில் இல்லாத பாம்புகளே இல்லை என்று சொல்லலாம். மழை நேரத்தில் சாதாரணமாகப் பாம்புகள் சென்றுகொண்டிருக்கும். ஒருமுறை வெற்றிமாறன் சார் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் முன்பு 8 அடியில் ஒரு பாம்பு சென்றது. ஒரு சில வினாடிகள் தான் வித்தியாசம். அந்தப் பாம்பிடம் இருந்து அவர் தப்பினார். இப்படி நாங்கள் பல்வேறு சவால்களைச் சந்தித்தோம்.

 

ஆம்புலன்ஸ் உட்பட முழு பாதுகாப்புடன் தான் விடுதலை பட படப்பிடிப்பை நாங்கள் மேற்கொண்டோம். வாத்தியார் கேரக்டரில் முதலில் பாரதிராஜா சார் நடிப்பதாகத்தான் இருந்தது. விஜய் சேதுபதி உள்ளே வந்த பிறகு பட்ஜெட்டும் பெரிதானது. ஒரு பாகமாக இருந்தது இரண்டு பாகங்களாக மாறியது. இந்தப் படத்தில் 60 நாட்கள் நடித்தார் விஜய் சேதுபதி சார். இரண்டாவது பாகத்தில் அவருடைய காட்சிகள் அதிகமாக இருக்கும்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.