Skip to main content

சன்னி லியோன் நிகழ்ச்சி; குண்டு வெடித்ததால் பரபரப்பு

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

incident happened at near Sunny Leone’s fashion show venue in Manipur

 

பிரபல நடிகை சன்னி லியோன், தற்போது இந்தி, தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே கலை, கடை திறப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சன்னி லியோன்.

 

அந்த வகையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நாளை (05.02.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் திடீரென குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர், "அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிப்பில் எந்த வித உயிர்ச்சேதமும் அருகில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை" எனத் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் பகுதியில் இந்தி திரைப்படங்களை மற்றும் அதன் இசையையும் ஆதரிப்பவர்களைத் தொடர்ந்து சில குழுக்கள் குறி வைத்து வருவதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. 

 

இந்த நிகழ்ச்சியை காதி பொருட்கள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

போலீஸ் தேர்வு எழுத உத்தரப் பிரதேசம் வந்த சன்னி லியோன்?

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
Sunny Leone picture in police exam hall ticket in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகப் பல்வேறு மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நேற்று (17-02-24) நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 775 மாவட்டங்களில் 2,385 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 

இந்த நிலையில், தேர்வர்களுக்கு அளிக்கப்படும் அனுமதிச் சீட்டு ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேர்வு அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து தேர்வு வாரியம் கூறியதாவது, ‘கன்னோஜ் பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட அந்த அனுமதிச் சீட்டில் உள்ள அனைத்து தகவலும் போலியானது. மேலும், இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத யாரும் வரவில்லை’ என்று தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் கொண்ட அனுமதிச் சீட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

சன்னி லியோன் வீட்டில் நடந்த சோகம்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

sunny leone house worker baby missing issue

 

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் 1 குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார். மேலும் நிறைய நலத்திட்ட உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகிறார்.  

 

இந்த நிலையில் தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் மகள் காணாமல் போனதாக இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், மும்பை போலீஸ் பக்கத்தை டேக் செய்து,  "தனது பணிப்பெண்ணின் 9 வயது மகள் அனுஷ்கா கிரண், நேற்று மாலை 7 மணி முதல் காணவில்லை. அந்த சிறுமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு, ரூ.11,000 கொடுக்கப்படும் என" என குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்லாது அவர் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 கொடுப்பதாக பதிவிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் காணாமல் போன அந்த சிறுமி தற்போது கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைத்தது. கடவுள் மிகவும் பெரியவர். கடவுள் இந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக. 24 மணி நேரம் கழித்து அனுஷ்காவை மீட்டெடுத்தோம்” என குறிப்பிட்டு மும்பை காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)