கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.
மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் பலரும் உதவி செய்து வரும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், தினசரி சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் தெருவோரத்தில் வசித்துவரும் மக்களுக்கு, காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி தானே பிரியாணி சமைத்து வழங்கி வருகிறார். இவரின் இந்த செயலுக்கு பலவேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.