Skip to main content

“தமிழ் சினிமாவுல பொற்காலமா நான் நினைக்கிறேன்” - நடிகர் சிம்பு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 

"I think it's a golden age in Tamil cinema" - actor Simbu talks!

 

'வெந்து தணிந்தது காடு' படத்தின் 50வது நாள் வெற்றி விழா சென்னையில் நேற்று (09/11/2022) மாலை நடைபெற்றது. விழாவில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நடிகர் சிம்பு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி K.கணேஷ், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் சிம்பு, "உதய் அண்ணா ரொம்ப தேங்க்ஸ். ஏன்னா இந்த படம் ரிலீஸ்க்கு வரும் போது, நல்லா கொண்டு போய் ரிலீஸ் பண்ணனும்கிற போது, உதய் அண்ணாகிட்ட பேசுன உடனே கண்டிப்பா உனக்காக நான் பண்றேனு சொன்னாரு. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. எல்லாருக்கும் நான் நன்றி தான் சொல்ல விரும்பறேன். எண்டயர் டீம், கௌதம் சாருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கறன். என்னோட மொத்த டீம் எல்லாருக்கும் ரொம்ப ஹாப்பி, எல்லாரோட ஒர்க் பண்ணதுல ரொம்ப சந்தோசம். 

 

அந்த 'மல்லிப்பூ' சாங் சூட்டிங்ல கேட்ட அன்னைக்கே வந்துட்டு மெயில் பண்ணிட்டேன். இந்த பாட்டு ஒரு பெரிய ஹிட் ஆகும்னு நினைக்கிறேனு. எண்டயர் டீமுக்கும் நன்றியைத் தெரிவிச்சிக்கறன். வேல்ஸ் பொறுத்த வரைக்கும், ஐசரி கணேஷ் பொறுத்த வரைக்கும், எப்படி எங்க அப்பா வந்து, சிம்பு சினி ஆர்ட்ஸ் இருந்ததோ, அந்த மாதிரி எனக்கு இன்னொரு புரொடக்சனா வேல்ஸ் தான் சொல்லுவேன். அந்த அளவுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி, எனக்கு இந்த படத்துல வந்து நல்லா பழகுவதற்கான வாய்ப்பு கிடைச்சிச்சு. ரொம்ப நன்றிண்ணே. தேங்க் யூ சோ மச். 

 

ஒரு விஷயம் இங்க என்ன சொல்லிக்க ஆசைப்படுறேனா, முன்னாடி வந்து பொதுவா சொல்லுவாங்க. இந்த மாதிரி சினிமா பண்ணும் போது, இந்த மாதிரி கதை வந்து நம்மால எடுக்க முடில. இந்த மாதிரி படம் மக்களுக்கு புரியுமா? அப்படினு நிறைய டைரக்டர் பேசி, புரொடியூசர்ஸ் பேசி நான் பாத்துருக்கேன். ஆனா இந்த ஒரு பீரியட் வந்து தமிழ் சினிமாவுல பொற்காலமா நான் நினைக்கிறன். ஏன்னா, ரீசண்டா பாத்தீங்கனா, எல்லா படமுமே வந்து ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. விக்ரம்ல இருந்து பொன்னியின் செல்வனாகட்டும், கர்நாடகாவுல காந்தாராவா இருக்கட்டும், லவ் டுடேனு இப்ப ஒரு படம் வந்துருக்கு. எதுக்கு இத சொல்றனா, முன்னாடி எல்லா டைரக்டர்ஸுக்கும் ஒரு கனவு இருந்திருக்கும். அந்த கனவெல்லாம் நனவாக்கக் கூடிய, நிறைவேற்றக் கூடிய நல்ல ஒரு பீரியடா நான் இத பார்க்கறேன். இத நம்ம தமிழ் சினிமா பயன்படுத்திக்கணும், மக்களும் ரசிச்சிப் படம் பாக்க ட்ரை பண்றாங்க. வித விதமான படங்கள் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. 

 

வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸுக்கு முன்னாடி, ஒரு சின்ன பயம் இருந்தது. ஏன்னா ஃபுல் அன் ஃபுல் அவுட் அன் அவுட் கமெர்சியல் படமாவோ, ஒரு ஹீரோவா வந்து, அந்த மாதிரியான ஒரு ஆஸ்பெக்ட் எதுமே இல்ல. நான் இந்த படத்துக்கு பாத்தீங்கன்னா, அந்த முத்துவாவே தெரியனுங்கறதுக்காக, ரொம்ப மெனக்கெட்டு நடிச்சிருந்தேன். அந்த ஒரு பயம் இருந்தது. ஆனா வித்தியாசமான படங்கள வந்து ரசிக்கக் கூடிய அந்த தன்மை மக்களுக்கு வந்துருக்கு. இந்த படத்துக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்ததே, எங்க எல்லாருக்கும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ரொம்ப நன்றி". இவ்வாறு நடிகர் சிம்பு தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

சிம்பு போல் ராம் சரணுக்குக் கிடைத்த கௌரவம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ram charan get honorary doctorate same like simbu

தெலுங்கு திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து முனனணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ராம் சரணை கோலிவுட் ரசிகரகளிடம் பிரபலமாக்கியது.  

இதையடுத்து மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் உலக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்தது. 

ராம் சரண் இப்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு படமும், சுகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், திரைப்படத் துறை மற்றும் சமூகத்திற்கு ராம்சரண் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்போது நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் சிம்புவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.