Skip to main content

சமந்தா தரப்பு வைத்த கோரிக்கையால் டென்ஷனான நீதிபதி! 

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Samantha Ruth Prabhu

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சமந்தா -  நாக சைதன்யா தம்பதியின் விவகாரத்திற்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக நடிகை சமந்தாவை நேரடியாகத் தாக்கி பலரும் பதிவிட்டுவந்தனர். அவையனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். மேலும், தன்னைப் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்ட ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் மீது மானநஷ்ட வழக்கும் தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையின் போது நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, விசாரணையின் போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சமந்தாவின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று யாரும் இல்லை. உங்கள் வழக்கு நடைமுறைப்படி விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார். 

 

மேலும், பிரபலங்கள் பொதுத்தளங்களில் தங்களது தனிப்பட்ட விவகாரங்களைப் பகிர்ந்துவிட்டு, பின்னர் அவதூறு வழக்கிற்காக நீதிமன்றத்தை நாடுகிறார்கள் எனக் கூறிய நீதிபதி, அவதூறு வழக்கு தொடுப்பதற்கு பதிலாக சம்மந்தப்பட்ட நபர்களை நேரடியாக மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கக் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple


வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோவில். இங்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்  நடிகர் நடிகைகள் வந்து சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.

 

Actress Samantha Swamy Darshanam at Golden Temple

 

இந்நிலையில் நேற்று பொற்கோவிலுக்கு வந்த பிரபல நடிகை சமந்தா ஸ்ரீ நாராயணி அம்மனை தரிசனம் செய்துள்ளார். பின்பு தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கையால் அபிஷேகம் செய்தும், தீபாராதனையும் செய்த பிறகு கோயிலை சுற்றி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொற்கோயில் மடாதிபதி சக்தி அம்மாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவருக்கு சக்தி அம்மா பிரசாதத்தை வழங்கியுள்ளார். வேலூர் பொற்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சமந்தாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Next Story

கோஷ்ட் Vs பிரின்ஸஸ்... பாலிவுட்டில் மிரட்ட இருக்கும் சமந்தா

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

Samantha debuting Bollywood movie

 

யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘குஷி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக இருக்கும் சமந்தா, தற்போது இந்தி திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். 

 

அதன்படி பாலிவுட் இயக்குநர் அமர் கௌசிக் இயக்கும் புதிய படத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளாராம். அதில் ஒன்று இளவரசி கதாபாத்திரம் என்றும், மற்றொன்று பேய் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள சமந்தா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 

இதற்கு முன்பு பாலிவுட் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இத்தொடர் வெளியாகி பெரும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரில் வருண் தவானுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.