Skip to main content

1994ஆம் ஆண்டிலேயே துணை இயக்குநராகிவிட்டாரா ஹெச்.வினோத்?

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

கடந்த 2014ஆம் ஆண்டு  ‘சதுரங்க வேட்டை’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். இந்த படத்தின் வெற்றியை அடுத்து வினோத் நடிகர் கார்த்தியை வைத்து மீண்டும் ஒரு உண்மை சம்பவங்களை வைத்து  ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்றொரு படத்தை இயக்கினார். இப்படமும் முதல் படத்தை போலவே மாபெரும் ஹிட் அடித்து வினோத்திற்கு பெரிய இயக்குனர் அந்தஸ்தை கொடுத்தது.
 

h.vinoth

 

 

இதன்பின் சிறிய இடைவேளை எடுத்திருந்தார் வினோத். அக்கால கட்டத்தில் அவர் விஜய்க்காக கதை பண்ணுகிறார். அஜித்திற்காக கதை பண்ணுகிறார் என்ற பேச்செல்லாம் வந்தது. திடீரென ஒரு நாள் பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகவும் அதில் அஜித்தை ஹீரோவாக வைத்து ஹெச்.வினோத் இயக்குகிறார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. தற்போது அந்த படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து ட்ரைலரும் வெளியிடப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படமும் உலகம் முழுவதும் வெளியாகுகிறது. 
 

இந்த படத்தை அடுத்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெச்.வினோத்தான் இயக்குகிறாராம். இது ஹெச்.வினோத் எழுதிய கதை என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இந்நிலையில் ஹெவ்.வினோத் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் யாரிடம் துணை இயக்குநராக இருந்திருந்தார் என்பதுதான்.ஹெச்.வினோத் 1994ஆம் ஆண்டே பார்த்திபன் இயக்கிய சரிகமபதநி படத்தில் துணை இயக்குநராக பணி புரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து புள்ளக்குட்டி என்ற பார்த்திபன் படத்திலும் வினோத் துணை இயக்குநராக பணி புரிந்துள்ளார். மேலும் விஜய் மில்டனிடமும் துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் வினோத். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திரியும் நெருப்பும் காதல் கொண்டால்...' - மீண்டும் கமலுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Harris Jayaraj in kamal vinoth movie

 

கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். 

 

இதனை முடித்துவிட்டு தனது 233வது படத்திற்காக அ. வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காகத் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் கமலின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இப்படம் அரசியல் கதைக் களத்தை மையமாகக் கொண்டு உருவாவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது 234வது படத்திற்காக மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தையும் மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தோடு கமலின் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. 

 

இந்த நிலையில், கமலின் 233வது படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் பணியாற்றியிருந்தார். அதில் அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் கமலுடன் இணையவுள்ளதாகத் தெரிகிறது. 

 

 

Next Story

கமல்ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணியின் புது அப்டேட்!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

KamalHaasan233 update

 

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஹெச். வினோத். படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ச்சியாக நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்ற படங்களாகும். அதற்கு பிறகு முன்னணி நடிகர்கள் பலர் இயக்குநர் ஹெச். வினோத்தை அணுகி தனக்கு ஒரு கதை பண்ணுமாறு அணுகி வந்தனர். 

 

நடிகர் கமல்ஹாசனும் புதிய தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநர் ஹெச். வினோத் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்நிலையில்  இப்படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் கமல்ஹாசன் ஈடுபடும் வீடியோ ஒன்றை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பலவகையான துப்பாக்கிகளை கமல்ஹாசன் சுட்டு பயிற்சியில் ஈடுபடுகிறார். இது கேங்ஸ்டர் கதையா? அல்லது காவல்துறை சம்பந்தமான கதையா என்பது குறித்த அப்டேட் விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.