Skip to main content

இந்த டகால்ட்டிலாம் எங்கிட்ட காட்டாத! கவுண்டமனி தரப்பு பதிலடி...

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

goundamani

 

எந்த பரபரப்பும் இல்லாத நேரத்தில் திரை பிரபலங்கள் குறித்து வதந்திகளைச் சிலர் பரப்பி வருவார்கள். ஏற்கனவே கவுண்டமணி பற்றியும் அவரது உடல்நிலை குறித்தும் வதந்திகள் வெளிவந்தன. அதற்கு கவுண்டமணி தரப்பும் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறது. 

 

இந்நிலையில் இன்று காலையிலிருந்து நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் யாரோ வதந்தி பரப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கவுண்டமணி தரப்பை, இதுகுறித்து கேட்டுப் பலரும் தொடர்பு கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவுண்டமணி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கவுண்டமணி மிகவும் நலமாக உள்ளதாகவும், அவர் அடுத்து படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  “இதுபோன்று வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கவுண்டமணியின் வழக்கறிஞர், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கவுண்டமணி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
goundamani land issue

கடந்த 1996 ஆம் ஆண்டு, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை கவுண்டமணி வாங்கி, அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து, 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதையடுத்து கட்டுமான பணிகள் 2003 ஆம் ஆண்டு வரை தொடங்கவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி வழக்கறிஞர் ஆணையர், சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே கவுண்டமணியிடம் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், கவுண்டமணியிடமிருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு தனியார் கட்டுமான நிறுவனமான ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் வணிக வளாகம் கட்டுவதற்காக, கவுண்டமணி கொடுத்த ஐந்து கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி அபிராமி பவுண்டேஷன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

வாத்தியாராக கம்பேக் கொடுக்கும் கவுண்டமணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

goundamani new film Palanichami Vathiyar pooja happened today

 

தமிழ் சினிமாவில் தனது டைமிங் கவுண்டராலும் நக்கல் கலந்த காமெடியாலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேல் கோலோச்சியவர் நடிகர் கவுண்டமணி. இவரது காமெடி காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செந்திலுடன் கவுண்டமணி நடித்த காட்சிகள், எவர்கிரீன் காம்போவாக காலம் கடந்து நிற்கிறது. பின்பு சினிமாவை விட்டு விலகி இருந்த கவுண்டமணி 2015 இல் வெளியான 49-ஓ படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ஓரிரு படங்களில் நடித்த கவுண்டமணி சில காரணங்களால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவில்லை.

 

இந்நிலையில், கவுண்டமணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'பழனிச்சாமி வாத்தியார்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை 'பேய காணோம்' படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இயக்க யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதாரவி, சித்ரா லட்சுமணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. 

 

இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.